search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voting percentage"

    நாடாளுமன்ற தேர்தலில் காலை 11 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தல் நடக்கிற 7 மாநிலங்களில் அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பீகாரில் 21.52%, அரியானாவில் 21.01%, மத்தியப்பிரதேசத்தில் 20.93%, உத்தரப்பிரதேசத்தில் 21.57%, மேற்கு வங்காளத்தில் 37.56%, ஜார்க்கண்டில் 30.23%, டெல்லியில் 15.95 சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்ற மூன்றாம்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.

    இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 78.29% வாக்குகளும் பீகாரில் 59.97% வாக்குகளும் பதிவாகின. கோவாவில் 71.09% வாக்குகளும் குஜராத்தில் 60.21% வாக்குகளும் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில் 12.86% வாக்குகளும் கர்நாடகாவில் 64.14% வாக்குகளும் பதிவாகின. கேரளாவில் 70.21% வாக்குகளும் மகாராஷ்டிராவில் 56.57% வாக்குகளும் பதிவாகின.

    ஒடிசாவில் 58.18% வாக்குகளும் திரிபுராவில் 78.52% வாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 57.74% வாக்குகளும் மேற்கு வங்காளத்தில் 79.36% வாக்குகளும் சத்தீஸ்கரில் 65.91% வாக்குகளும் பதிவாகின.



    யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71.43% வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65.34% வாக்குகளும் பதிவாகின.

    ‏அவ்வகையில், மேற்கண்ட தொகுதிகளில் இன்று ஒட்டுமொத்தமாக 64..66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #voterturnout
    ×