search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Idli"

    இட்லியை பலவிதமான வகைகளில் செய்யலாம். இன்று 4 வகையான பருப்பை வைத்து சுவையான சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை,
    அரிசி - கால் கப்
    எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

    தாளிக்க:

    நெய் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன்,
    நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 3,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி முக்கால் மணி நேரம் ஊறவிட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    மாவை புளிக்க விடக்கூடாது.

    மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி ரெடி

    இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் கால்சியம், நார்ச்சத்து ஆகிய இரண்டும் அதிகம் இருக்கிறது. இன்று கேழ்வரகில் சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு - 3/4 கப்
    உப்பு - 1 தே.கரண்டி



    செய்முறை :

    உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

    கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.

    இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 2 கப்
    வெந்தயக்கீரை - 1 கட்டு,
    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 3,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

    வதக்கிய கீரையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த வெந்தயக்கீரை இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலை பொடி இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - 40
    நெல் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

    அரைக்க :

    கறிவேப்பிலை - 3 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - அரை டேபிள்ஸ்பூன்

    தாளிக்க  :

    கடுகு - சிறிதளவு,
    உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2.



    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ், சம்பா ரவையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்
    சம்பா ரவை - அரை கப்
    தயிர் - கால் கப்
    சோடா மாவு - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர்  சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    பிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    அடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சாம்பார், புதினா சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையில் இட்லி செய்து கொடுக்கலாம். இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - 1 கிலோ,
    சிறுகீரை - 1 கட்டு,
    சிறுபருப்பு - 100 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 6,
    தக்காளி - 1,
    பெரிய வெங்காயம் - 2,
    உப்பு - தேவைக்கு,
    பூண்டு - 4 பல்.



    செய்முறை

    சிறுகீரையை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொடியாக நறுக்கிய கீரையுடன் சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுக்கவும்.

    பின்பு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இட்லி மாவில் உப்பு, அரைத்த கீரை கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சிறுகீரை இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×