search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oats Idli"

    • டயட் ஃபாளோ பண்றவங்க இதை கண்டிப்பாக உங்களது லிஸ்டில் சேர்க்கலாம்.
    • கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும்.

    ஓட்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு அதைக் குறைப்பதற்கு கோதுமை ரவை ஒரு வரப்பிரசாதமாகும். இன்றைக்கு ஒரு ஹெல்த்தியான ஓட்ஸ் இட்லி மிருதுவாகவும், பஞ்சுபோலவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ்- ஒரு கப்

    கோதுமை ரவை- ஒரு கப்

    தயிர்- ஒரு கப்

    கடலைபருப்பு- ஒரு ஸ்பூன்

    பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)

    கடுகு- கால் டீஸ்பூன்

    சிரகம்- கால் டீஸ்புன்

    உளுந்தப்பருப்பு- கால் டீஸ்பூன்

    கேரட்- 1 துருவியது

    முந்திரி- 2 ஸ்பூன்

    இஞ்சி- கால் ஸ்பூன்

    சோடா உப்பு

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஓட்சை போட்டு வறுக்க வேண்டும். அதில் கோதுமை ரவையையும் சேர்த்து வறுத்து எடுத்து வேறு ஒரு பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கேரட், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஓட்ஸ், கோதுமை ரவையை இதில் சேர்க்க வேண்டும். அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சோடா உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் மூடி போட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ஓட்ஸ் இட்லி தயார்.

    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ், சம்பா ரவையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்
    சம்பா ரவை - அரை கப்
    தயிர் - கால் கப்
    சோடா மாவு - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர்  சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    பிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    அடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சாம்பார், புதினா சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×