search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udhayakumar"

    • ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது.
    • நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

    மதுரை:

    மதுரை தனியார் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாரதம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 2,200 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது இதற்காக பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு சிறப்புகளை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடு சேர்ந்த செயற்கைக் கோளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது. தற்போது தேவை அதிகரித்து இருந்ததால் வேறு இடங்களை தாண்டி அமைக்க முடிவு செய்தது. அப்போது பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை தேர்வானது.

    அப்போது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். நான் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தேன். இதற்கு தேவையான இடத்தை தருமாறு இஸ்ரோ சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 2,223 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதனை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். மேலும் 8 வட்டாட்சியர்களும், தேவையான சர்வேர்களும் நிலம் எடுப்பு பணிகள் தீவிரமாக செய்து கொடுத்தனர்.

    இந்த பணியினை அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து கொடுத்தார். இதற்காக நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மின்னல் வேகத்தில் நில ஆர்ஜித பணிக்கு எடப்பாடியார் அரசு அப்போது செயல்படுத்தி கொடுத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வருகிற 1-ந்தேதி நாகர்கோவில் வரும் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1, 2-வது அணு உலைகள் இயங்குகிறதா? இல்லையா? என்பது தெரியும் முன்பே 3, 4, 5, 6 என அணு உலை பூங்கா அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இந்த அணு உலை பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    குமரி மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம், மணக்குடி சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும். இந்த 3 பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி தென்தமிழகத்தை காப்போம் என்ற தலைப்பில் பாளை நூற்றாண்டு மண்டபம் அருகே வருகிற 1-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக போலீசாரிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அனுமதி தரவில்லை. அனுமதி மறுக்கப்பட்டால் வருகிற 1-ந்தேதி நாகர்கோவில் வரும் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் இந்த 3 கோரிக்கைகளையும் முன்வைத்து பிரசாரம் செய்ய வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசின் சிபாரிசுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். உடனே அவரை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அகில இந்திய மக்கள் மேடை நிர்வாகி வக்கீல் ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி அப்துல் கனி, த.மு.மு.க. ரசூல், த.ம.ஜ.க. அப்துல் ஜபார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாயமாகியிருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டு பிடிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

    சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் அரசியல் பேச்சுக்கு, “சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள்” என அமைச்சர் உதயகுமார் பதில் கொடுத்துள்ளார். #Vijay #Udhayakumar #Sarkar
    மதுரை:

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்’ என்று அதிரடியாகப் பேசினார். மேலும் ‘எல்லாரும் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம்’ என்றார் . 



    விஜயின் இந்த பேச்சு அரசியல் களத்தை பரபரபாக்கியுள்ள நிலையில், பல அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும்நிலையில், அமைச்சர் உதயகுமார்,  ‘சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள். திருவிழாவுக்கு வருவோரெல்லாம், சாமியாக முடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள்.’ என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
    காணொலி காட்சிகள் மூலம் நடிகர் விசு, அவதூறாக பேசி மிரட்டல் விடுப்பதாக நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் சுப.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் தலைவருமான சுப. உதயகுமார் இன்று நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விசு பேசும் காணொலி காட்சி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் நடிகர் விசு என் பெயரை குறிப்பிட்டு மிகவும் அநாகரீகமாக பேசியுள்ளார்.

    இது பற்றி நான் அவருக்கு என் முகநூல் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். என்னை பற்றி பேசும் அவதூறு கருத்துக்களை நீக்கிவிடும்படி கூறியிருந்தேன்.

    ஆனால் அவர் அக்காட்சிகளை நீக்காமல் என்னை மீண்டும் அவதூறாகவும், உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியும் விமர்சித்து இருந்தார்.

    இது பற்றி நான் சென்னையில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நடிகர் விசு எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசி வருகிறார்.

    நடிகர் விசுவின் கருத்துக்களால் நானும், என் குடும்பத்தினரும் மிகவும் மன உளைச்சலில் உள்ளோம். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடிகர் விசுவால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    ×