search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராக்கெட் ஏவுதளம்- மின்னல் வேகத்தில் பணிகளை செய்தவர் எடப்பாடியார்
    X

    ராக்கெட் ஏவுதளம்- மின்னல் வேகத்தில் பணிகளை செய்தவர் எடப்பாடியார்

    • ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது.
    • நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

    மதுரை:

    மதுரை தனியார் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாரதம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 2,200 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது இதற்காக பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு சிறப்புகளை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடு சேர்ந்த செயற்கைக் கோளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது. தற்போது தேவை அதிகரித்து இருந்ததால் வேறு இடங்களை தாண்டி அமைக்க முடிவு செய்தது. அப்போது பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை தேர்வானது.

    அப்போது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். நான் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தேன். இதற்கு தேவையான இடத்தை தருமாறு இஸ்ரோ சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 2,223 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதனை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். மேலும் 8 வட்டாட்சியர்களும், தேவையான சர்வேர்களும் நிலம் எடுப்பு பணிகள் தீவிரமாக செய்து கொடுத்தனர்.

    இந்த பணியினை அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து கொடுத்தார். இதற்காக நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மின்னல் வேகத்தில் நில ஆர்ஜித பணிக்கு எடப்பாடியார் அரசு அப்போது செயல்படுத்தி கொடுத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×