search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயகுமார்"

    • ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது.
    • நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

    மதுரை:

    மதுரை தனியார் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் பாரதம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 2,200 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது இதற்காக பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு சிறப்புகளை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடு சேர்ந்த செயற்கைக் கோளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது. தற்போது தேவை அதிகரித்து இருந்ததால் வேறு இடங்களை தாண்டி அமைக்க முடிவு செய்தது. அப்போது பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை தேர்வானது.

    அப்போது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். நான் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தேன். இதற்கு தேவையான இடத்தை தருமாறு இஸ்ரோ சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 2,223 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. அதனை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். மேலும் 8 வட்டாட்சியர்களும், தேவையான சர்வேர்களும் நிலம் எடுப்பு பணிகள் தீவிரமாக செய்து கொடுத்தனர்.

    இந்த பணியினை அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து கொடுத்தார். இதற்காக நிலத்தை ஒதுக்கி கொடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மின்னல் வேகத்தில் நில ஆர்ஜித பணிக்கு எடப்பாடியார் அரசு அப்போது செயல்படுத்தி கொடுத்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது.
    • இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் விதமாக அ.தி.மு.க. மூத்த தலைமை நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாநில இளைஞர் பாசறை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன், அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரையாற்றினர்.

    ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது. மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர்.

    நீதிமன்றம் கூட எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என உறுதி செய்து தீர்ப்பு தந்தது. அதனை ஏற்க முடியாது என சொல்லி கொண்டிருக்கின்றனர். தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பிவிடலாம் தூங்கு வதை போல சிலர் நடித்து கொண்டிருக்கின்றனர் அவர்களை எப்படி எழுப்புவது. அவர்களை தேடி கொண்டிருக்கிறோம்.ஆட்சி மாற்றத்தின் கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-

    அ.தி.மு.க.வின் போதிதர்மனாக எம்.ஜி.ஆர் இருந்தபோது 17 லட்சம் பேர் தொண்டர்களாக இருந்தனர். அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1½ கோடி தொண்டர்களாக உயர்ந்தனர். தற்போது எடப்பாடியார் காலத்தில் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. உலக அளவில் 7-வது பெரிய கட்சியாக ஏழாவது அதிசயமாக அ.தி.மு.க. இயக்கம் இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாங்கள் சத்தியத்தையும், உண்மையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம்.
    • அ.தி.மு.க. அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனை தாங்கிக்கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்த அரசு.

    ஈரோடு:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை 42-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் வீதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலை ஆளும் கட்சி பண பலம், அதிகார பலம் கொண்டு சந்தித்து வருகிறது. நாங்கள் சத்தியத்தையும், உண்மையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம்.

    இதனால் எங்கள் பிரசாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனை தாங்கிக்கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்த அரசு. எடப்பாடி வகுத்து கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. இடைத்தேர்தலில் வெற்றி பெறும்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் இந்த தி.மு.க. அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பில் ஏற்று 520 திட்டங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மடிக்கணினி திட்டம் கேள்விக்குறியாக இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக சாக்கு போக்கு சொல்லி வருகிறார்.

    முதல் தலைமுறையினர் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர். ஈரோடு நகர் பகுதியில் சொத்து வரி உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பல்வேறு தடைகளை தாண்டி பல்வேறு துரோகங்களை தாண்டி எடப்பாடி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடு த்துள்ளார்.

    திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    மக்கள் அளிக்கும் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு இந்த தேர்தல் ஒரு அச்சாரமாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்து விலையில்லா செட்டாப் பாக்ஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
    • 16 ஆயிரத்து 702 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 36.40 லட்சம் டிஜிட்டல் தர நிலை வரையறை மற்றும் உயர் வரையறை செட் ஆப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனது சேவையை தொடருவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.

    2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் குறைந்த கட்டணத்தில், நிறைந்த கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து புத்துயிர் அளித்தார்.

    இதனால் 4.94 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 474 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக கீழ் இணைப்புகள் வழங்கப்பட்டு 70.52 லட்சமாக உயர்ந்தது.

    இந்தியா முழுவதும் கேபிள் டி.வி. சேவைகளை நான்கு கட்டங்களில் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்தது.

    இதையடுத்து 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்து விலையில்லா செட்டாப் பாக்ஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார். அதன் மூலம் 16 ஆயிரத்து 702 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 36.40 லட்சம் டிஜிட்டல் தர நிலை வரையறை மற்றும் உயர் வரையறை செட் ஆப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை, சேலம், கோவை, திருச்சி மதுரை ஆகிய நகரங்களில் உயர் வரையறை கேபிள் டிவி சேவையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதுதான் படிப்படியாக இன்றைக்கு ஆலமரம் போல் வளர்ந்திருக்கிற அரசு கேபிள் டி.வி. நிறுவனம். பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 595 அரசு இ சேவை மையங்களை நிர்வாகித்து வந்தது.

    அரசு கேபிள் டிவியின் கீழே 2017 ஏப்ரல் முதல் 36 லட்சம் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 21 லட்சம் செட்டாப் பாக்ஸ் மட்டுமே செயலில் உள்ளன. 11 லட்சம் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லை. தி.மு.க. அரசுக்கு ஏழை எளிய மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை தான் இது காட்டுகிறது.

    அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேர்களை தனியாருக்கு மாற்றம் செய்திருப்பது அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்துகிற உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தனியாருக்கு சிவப்பு கம்பளம் விரித்து தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த செயலுக்கு ஒப்புக்கு தப்பாக சேர்மனை நீக்கி இருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஆலமரமாக வளர்ந்திருக்கிற அரசு கேபிள் நிறுவனத்தின் மீது மறைமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு யுத்தமாக பார்க்கிறோம். இந்த நடவடிக்கை அரசு கேபிள் டிவியை காப்பாற்றவா? அல்லது மூடுவிழா நடத்துவதற்கா? என்று அரசு விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நான் பயின்றபோது ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன்.
    • நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம்.

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நான் பயின்றபோது ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன். இது ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்ற போது எனக்கு மாணவர் அணிச் செயலாளர் பதவி வழங்கினார்.

    தொடர்ந்து இந்த இயக்கத்தின் 50 ஆண்டுகால விழா வரலாற்றில் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு மாணவரணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், பேரவை செயலாளர் என்று 3 அணிகளுக்கும் சிறப்பாக பணியாற்றிய அ.தி.மு.க. தொண்டன் என்ற பெருமையை எனக்கு தந்தவர் ஜெயலலிதா.

    நான் தூய தொண்டாக இருந்து உழைத்து வருகிறேன். ஓ.பி.எஸ்.யின் வரலாறும், என் வரலாறும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம். திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் நான் தயாராக உள்ளேன்.

    ஓ.பி.எஸ். வீட்டிலும், எனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஓழிப்பு துறை ஓரே நேரத்தில் சோதனை நடத்தி எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன். அவர் சொத்து குவித்ததாக அறிந்தால் ஓ.பி.எஸ். பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? நான் கட்சி நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன்.

    என்னை மிரட்டி பார்க்கும் ஓ.பி.எஸ். குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×