search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck Accident"

    • வேலை முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா அன்னை வாசுகி தெருவை சேர்ந்தவர் ஜெகஜீவன் ராம் (வயது 65). இவர் சேலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வேலு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஜெகஜீவன் ராம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெக ஜீவன் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர் வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கண்ணக்கந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது 19). கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு கண்ணக்கந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். இன்று காலை அரட்டவாடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பாலாஜி பைக்கில் சென்றார்.

    கொட்டகுளம் அருகே வரும்போது எதிரே கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், பாலாஜி ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பாலாஜி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்
    • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

    வேலூர்:

    வேலூர், கஸ்பா ஆர்.என். பாளையத்தை சேர்ந்தவர் சதாம்பாஷா ( வயது 32), டிரைவர். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக சதாம்பாஷா ஓட்டிச் சென்ற மொபட் மீது திடீரென மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சதாம்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சதாம்பாஷா பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெங்களூரை சேர்ந்தவர்
    • சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது பரிதாபம்

    செங்கம்:

    பெங்களூரை சேர்ந்தவர்கள் சாந்தி, ரமேஷ். இவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காரில் வந்தனர்.

    இவர்களுடன் உறவினர்களான தர்மபுரி யை சேர்ந்த துரைராஜ், கிருஷ்ணகிரியை சேர்ந்த பானுமதி என்பவர்கள் உடன் இருந்தனர். சாமி தரிசனம் முடிந்து நள்ளிரவு காரில் அனைவரும் பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    உடுமலைப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.

    செங்கம் உச்சிமலை குப்பம் அருகே வந்தபோது லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே சாந்தி ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    காரில் பயணம் செய்த சாந்தி, ரமேஷ், துரைராஜ், பானுமதி, லாரி டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாகச் சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாந்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு சாந்தி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்பூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து நடந்தது
    • டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்

    ஆம்பூர்:

    சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பீர் கம்பெனியில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மதுபான கடைக்கு பீர் பாட்டிகள் ஏற்றிச் சென்றத.

    லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் அருகே சோலூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பி தலைமறைவானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் லாரியை 20 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை கிரேன் மூலமாக பள்ளத்தில் இருந்து லாரியை மீட்டு மாற்று லாரியின் மூலம் ரூ.46 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமானது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி லாரி டிரைவர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    வந்தவாசியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை போளூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.

    சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு அரசு பள்ளி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

    திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது. மேலும் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது.

    அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் முனியப்பன், மனைவி ஜெயலட்சுமி, மகன் ஏழுமலை இவரது மனைவி சுகன்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது.

    பஸ்சில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அரசம்பட்டு கூட்ரோடு அருகே வரும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி திடீரென பஸ் மீது மோதியது. இதில் பஸ்சும், கடெய்னர் லாரியும் சேதமானது. பஸ்சில் பயணம் செய்த தேப்பரம்பட்டு கிராமத்தை சேர்ந்த துளசி நாதன் (வயது 64). நாடக நடிகர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சில் படுகாயம் அடைந்து சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழை க்கப்பட்டு படுகாயம் அடைந்த வர்களை சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக துளசி நாதனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் துளசி நாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சேத்து ப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துளசி நாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

    தொப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ராட்சத இரும்பு உருளையை ஏற்றி சென்று லாரி தருமபுரி மாவட்டம், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் ராட்சத உருளையும் சாலை ஓரம் கவிழ்ந்தது.

    இதை தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

    வாகன இடிபாடுகளில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தவிபத்தால் பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பின்னால் சென்ற லாரியின் டிரைவர் ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த முனிசாமி (வயது 55) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் லாரியில் சிக்கியிருந்து டிரைவரின் உடலை போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சாலை விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சா லையில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு கண்ணாடி லோடுகளை ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் வந்துக் கொண்டிருந்த வேன் மோதியதில் வேன் டிரைவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சேலம் ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். பிரகாஷ் (வயது 36) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா (வயது 35) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் பிரகாஷ் சேலத்தில் இருந்து சென்னைக்கு லோடு ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்றார். லோடு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு திரும்பினார்.

    கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சக்கரத்தில் சிக்கி பரிதாபம்
    • ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள ஏரிகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). திருமணம் ஆகாத இவர் விவசாயம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஏரிக்கொல்லை கிராமத்திலிருந்து அணைக்கட்டு நோக்கி சக நண்பர்களுடன் வெவ்வேறு பைக்கில் சென்றனர். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டுள்ளனர்.

    ஆவின் டேங்கர் லாரிக்குள் பிரபு நிலை தடுமாறி விழுந்தார். பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பியது. அப் போது கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பிய லாரி யின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் உதிரி பாகங் கள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட் டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடி யாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அரை மணிநேரம் போராடிஇடிபா டுகளில் சிக்கி இருந்த டிரை வர் உடலை மீட்டனர். பின் னர் ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்ப வம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மேலும் விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×