search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவின் லாரி மோதி வாலிபர் பலி
    X

    வாலிபரின் உயிரை பறித்த ஆவின் பால் லாரி.

    ஆவின் லாரி மோதி வாலிபர் பலி

    • சக்கரத்தில் சிக்கி பரிதாபம்
    • ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள ஏரிகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). திருமணம் ஆகாத இவர் விவசாயம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஏரிக்கொல்லை கிராமத்திலிருந்து அணைக்கட்டு நோக்கி சக நண்பர்களுடன் வெவ்வேறு பைக்கில் சென்றனர். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டுள்ளனர்.

    ஆவின் டேங்கர் லாரிக்குள் பிரபு நிலை தடுமாறி விழுந்தார். பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×