search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மீது லாரி மோதி பெண் பலி
    X

    கார் மீது லாரி மோதி பெண் பலி

    • பெங்களூரை சேர்ந்தவர்
    • சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது பரிதாபம்

    செங்கம்:

    பெங்களூரை சேர்ந்தவர்கள் சாந்தி, ரமேஷ். இவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காரில் வந்தனர்.

    இவர்களுடன் உறவினர்களான தர்மபுரி யை சேர்ந்த துரைராஜ், கிருஷ்ணகிரியை சேர்ந்த பானுமதி என்பவர்கள் உடன் இருந்தனர். சாமி தரிசனம் முடிந்து நள்ளிரவு காரில் அனைவரும் பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    உடுமலைப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.

    செங்கம் உச்சிமலை குப்பம் அருகே வந்தபோது லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே சாந்தி ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    காரில் பயணம் செய்த சாந்தி, ரமேஷ், துரைராஜ், பானுமதி, லாரி டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாகச் சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாந்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு சாந்தி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×