search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tripura CM"

    • அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.
    • சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் (எம்பிபி) விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவையை விரைவில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

    நவீன திரிபுராவின் கட்டிடக் கலைஞராகக் கருதப்படும் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் 5 மீட்டர் உயர வெண்கலச் சிலையை இங்குள்ள விமான நிலையத்தில் சஹா திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியிருப்பதாவது:-

    திரிபுராவின் வளர்ச்சியில் மாணிக்ய வம்சத்தினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

    2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று, 2018ல் திரிபுராவில் பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, திரிபுராவின் மகாராஜாக்கள் கவுரவிக்கப்பட்டு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சிங்கர்பில் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது எம்பிபி விமான நிலையம் என மறுபெயரிடப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் நினைவாக விமான நிலையத்தை அதிகாரப்பூர்வமாக அர்ப்பணித்தார்.

    70களில், திரிபுராவில் இவ்வளவு அழகான விமான நிலையம் கட்டப்படும் என்று நாம் யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இந்த விமான நிலையம் இப்போது வடகிழக்கில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

    தற்போது, அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.

    அகர்தலா விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதற்கு மாநில அரசு சாதகமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு நன்றி, திரிபுரா விமான இணைப்பு, சாலை இணைப்பு மற்றும் ரெயில் இணைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார்.
    • சிறுமியின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    அகர்தலா:

    திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேற்று முன்தினம் குமார்காட் பகுதியில் இருந்து அகர்தலாவுக்கு ரெயிலில் பயணம் செய்தார். அப்போது ரெயிலில் பயணம் செய்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாஸ் என்ற சிறுமி முதல்-மந்திரியுடன் உரையாடினார். அப்போது சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்ட முதல்-மந்திரி மாணிக் சாஹா, ஆகஸ்டு 6-ந் தேதியான நேற்று சிறுமி ஸ்ரீஅதிதா தாசுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், குமார்காட்டில் இருந்து அகர்தலாவுக்கு திரும்பும் வழியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாசிடம் பேசினேன். இன்று அவளுடைய பிறந்தநாள் என்று அறிந்தேன். ஸ்ரீஅதிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    • திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • திருபுரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 365 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருபுரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 365 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முதல்வர் மாணிக் சாஹா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் முற்றிலும் ஆரோக்கியமாகவும், எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாகவும் இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திரிபுரா மாநில முதல்வரை கொலை செய்வதற்கு போதை மருந்து மாபியாக்கள் திட்டம் தீட்டிய தகவல் வெளியானதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #TripuraCM #BiplabKumarDeb
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் பாஜக-திரிபுரா சுதேச மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவைச் சேர்ந்த பிப்லப் குமார் தேவ் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து போதை மருந்து மற்றும் கஞ்சா கடத்தல் கும்பல்களை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 6 மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை மருந்துகளை தவறான செயல்களுக்கு பயன்படுத்துதல் மட்டுமின்றி பல சட்டவிரோத செயல்களும் கணிசமாக குறைந்துள்ளன.


    முதல்வர் பிப்லப் குமார் தேவின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளால் போதை மருந்து கடத்தல் கும்பல்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். அத்துடன் அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டியுள்ளனர். போதை மருந்து மாபியாக்கள் மியான்மரில் ஒன்று கூடி, முதல்வரை கொலை செய்வற்கு கூலிப்படையை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து முதல்வருக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி திரிபுரா அரசுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியது. முதல்வருக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இசட் பிரிவு பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இதுதவிர உளவுத்துறை தகவல்களையும் உடனுக்குடன் பெற்று அதன் அடிப்படையில் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்திற்குள் மட்டுமின்றி மாநிலத்திற்கு வெளியிலும் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ரஜிப் பட்டாச்சார்ஜி கூறினார். #TripuraCM #BiplabKumarDeb #DrugMafias
    ஏடாகூடமாக எதையாவது சொல்லி நெட்டிசன்கள் வாய்க்கு அவல் போடும் திரிபுரா முதல்வர் இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் கூடுவதற்கான காரணத்தை கூறி வைரல் ஆகியுள்ளார். #Biplab #BiplabKumarDeb
    புதுடெல்லி:

    திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றவர் பிப்லப் குமார் தேப், பாஜகவை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர், “மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என கூறியிருந்தார். இந்த கருத்து கிண்டலுக்கு உள்ளாகவே, “குறுகிய மனம் கொண்டவர்களால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என சமாளித்தார்.

    இதனால், பிப்லப் தேசிய அளவில் கிண்டலுக்கு உள்ளாகவே, பா.ஜ.க எம்.எல்.ஏ, எம்.பி.க்களிடம் நரேந்திரமோடி ஆப் மூலம் பேசிய பிரதமர் மோடி, மீடியாக்களுக்கு மசாலா தரும் விதமாக யாரும் கருத்து கூற வேண்டாம் என தெரிவித்தார். கட்சியின் செய்திதொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

    மோடி பேசிய சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிப்லப் குமார் தேப், ஐஸ்வர்யா ராய் இந்திய அழகை பிரதிபலிக்கிறார். டயானா ஹைடன் இல்லை என பேச சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே ‘சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுந்த தகுதி வாய்ந்தவர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் அல்ல’ என பிப்லப் பேசினார்.

    ‘சிவில் எஞ்சினியர்கள் கட்டிடத்தை எப்படி கட்டுவது என்பதை அறிந்தவர்கள். அரசு திட்டங்களை அவர்களால் முறையாக கட்டமைக்க முடியும். மெக்கானிக்கல் எஞ்சினியர்களுக்கு எப்படி தெரியும்?’ எனவும் அவர் கூறியிருந்தார். பிப்லப்பின் இந்த கருத்தை முன்வைத்தும் பலர் அவரை கிண்டல் செய்தனர்.

    இந்நிலையில், மீண்டும் பிப்லப் வைரலாகியுள்ளார். இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடுவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். 

    ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப்போட்டியை தொடக்கி வைத்த அவர் பேசுகையில், “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என பிப்லப் கூறினார்.

    எந்த விதமான அறிவியியல் தரவுகளும் இல்லாமல் முதல்வர் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என அம்மாநில கட்சிகள் இதனை விமர்சனம் செய்துள்ளன. #Biplab #BiplabKumarDeb
    சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான பிப்லப் குமார் தேப், தற்போது ரவீந்திரநாத் தாகூர் குறித்து பேசி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். #BiplapKumarDeb
    அகர்தலா:

    சமீபகாலங்களில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும் சிரிக்கவைப்பதாகவும், ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம்? என சிந்திக்க வைப்பதாகவும் அமைகிறது. அந்த வகையில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருபவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப்.

    பாஜகவைச் சேர்ந்த இவரது பிரசித்தி பெற்ற பேச்சுகளில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்யக்கூடாது, ராமாயண காலத்திலேயே இன்டர்நெட் வசதி, செயற்கைக் கோள் போன்றவை இருந்தது போன்றவையாகும்.

    இந்நிலையில், தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்தவர் ரவீந்திரநாத் தாகூர் என கூறியுள்ளார்.

    முதல்வரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக பேசிய திரிபுராவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் தேவ்புர்மான், முதல்வரின் இந்த கருத்து அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ‘1919-ம் ஆண்டில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் போராட்டத்தின் போது, தாகூர் தனக்கு அளிக்கப்பட்ட வீரத்திருமகன் பட்டத்தை நிராகரித்ததாகவும், அதனால், எனது தாத்தா மன அமைதியின்றி இருந்ததாகவும் அவரது டைரியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த கருத்து முட்டாள்தனமாக உள்ளது’ என்றும் தெரிவித்தார்.

    மேலும், முதல்வரின் கருத்துக்கு திரிபுராவின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிராஜித் சின்ஹா கூறுகையில், ’முதல்வரின் இதுபோன்ற கருத்துக்களால் வெட்கப்படவேண்டியிருக்கிறது’ என்றார்.
    ×