search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manik Saha"

    • சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார்.
    • சிறுமியின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    அகர்தலா:

    திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேற்று முன்தினம் குமார்காட் பகுதியில் இருந்து அகர்தலாவுக்கு ரெயிலில் பயணம் செய்தார். அப்போது ரெயிலில் பயணம் செய்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாஸ் என்ற சிறுமி முதல்-மந்திரியுடன் உரையாடினார். அப்போது சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்ட முதல்-மந்திரி மாணிக் சாஹா, ஆகஸ்டு 6-ந் தேதியான நேற்று சிறுமி ஸ்ரீஅதிதா தாசுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், குமார்காட்டில் இருந்து அகர்தலாவுக்கு திரும்பும் வழியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாசிடம் பேசினேன். இன்று அவளுடைய பிறந்தநாள் என்று அறிந்தேன். ஸ்ரீஅதிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    • பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்வானார்.
    • திரிபுரா ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    அகர்தலா:

    திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

    இதன்மூலம் திரிபுராவின் முதல் மந்திரியாக 2-வது முறையாக மாணிக் சகா பதவியேற்க உள்ளார். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இந்நிலையில், திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சகா முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
    • இதில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

    இதற்கிடையே, திரிபுரா முதல் மந்திரியான மாணிக் சகா மீண்டும் 2-வது முறையாக முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மற்றொரு பா.ஜ.க. மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல் மந்திரியுமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது. இதனால் தேர்தலில் வெற்றிபெற்ற போதும் முதல் மந்திரி யார் என்பதில் திரிபுரா பா.ஜ.க.வில் குழப்பம் நீடித்தது. இதனால் பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சை குழப்பம் முடிவுக்கு வந்தது.

    இதன்மூலம் திரிபுராவின் முதல் மந்திரியாக 2-வது முறையாக மாணிக் சகா விரைவில் பதவியேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    முதல் மந்திரியாக மாணிக் சகா மற்றும் மந்திரிகள் பதவியேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    அகர்தலா:

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என அம்மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பா.ஜ.க. உழைத்து வருகிறது. திரிபுராவில் கடந்த தேர்தலை விட எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    ×