search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச விமான சேவை"

    • அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.
    • சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் (எம்பிபி) விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவையை விரைவில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

    நவீன திரிபுராவின் கட்டிடக் கலைஞராகக் கருதப்படும் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் 5 மீட்டர் உயர வெண்கலச் சிலையை இங்குள்ள விமான நிலையத்தில் சஹா திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியிருப்பதாவது:-

    திரிபுராவின் வளர்ச்சியில் மாணிக்ய வம்சத்தினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

    2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று, 2018ல் திரிபுராவில் பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, திரிபுராவின் மகாராஜாக்கள் கவுரவிக்கப்பட்டு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சிங்கர்பில் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது எம்பிபி விமான நிலையம் என மறுபெயரிடப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் நினைவாக விமான நிலையத்தை அதிகாரப்பூர்வமாக அர்ப்பணித்தார்.

    70களில், திரிபுராவில் இவ்வளவு அழகான விமான நிலையம் கட்டப்படும் என்று நாம் யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இந்த விமான நிலையம் இப்போது வடகிழக்கில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

    தற்போது, அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.

    அகர்தலா விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதற்கு மாநில அரசு சாதகமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு நன்றி, திரிபுரா விமான இணைப்பு, சாலை இணைப்பு மற்றும் ரெயில் இணைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×