search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trade war"

    ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது.
    பீஜிங்:

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    உடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.

    இதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.

    மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


    அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது.
    வாஷிங்டன்:

    உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த அதிரடியை அவர் மேற்கொண்டார். அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) அளவுக்கு கடந்த ஆண்டு வரி விதித்தார்.

    டிரம்பின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது.

    எனினும் இந்த வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. தற்போதுகூட சீன துணை பிரதமர் லியு ஹி, வாஷிங்டனில் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

    இதில் அதிக முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு மேலும் வரி விதிப்பை அதிகரித்து நேற்று டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரி அதிகரித்து இருப்பதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலில் வருவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடியை மேற்கொண்டிருப்பது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆழ்ந்த வருத்தத்தை சீனா வெளியிட்டு உள்ளது.

    அதேநேரம் டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக சீனாவும் அறிவித்து உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகப்போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என சீனா தெரிவித்துள்ளது. #TradeWar
    பெய்ஜிங் :

    அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், ’தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது.

    இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.

    சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

    சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்’ என்றார். #TradeWar
    அமெரிக்காவும், சீனாவும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. #China #US #TradeWar
    பீஜிங்:

    இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

    அதாவது இரு நாடுகளும் பரஸ்பரம் புதிய வரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா வரிவிதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின் துடைப்பான் முதல் இணையதள கருவிகள் வரை இந்த வரி விதிப்பு பொருந்தும்.

    இதைப்போல அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு முதல் குறிப்பிட்ட ரக விமானங்கள் வரையிலான பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய வரி விகிதத்தை சீனா அறிவித்து உள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தி இருந்தாலும், இதை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். எனினும் அதற்கான காலத்தைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. #China #US #TradeWar
    அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை அடுத்து தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள், என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. #TradeWar
    பெய்ஜிங் :

    ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது.

    அமெரிக்காவின் அதிரடி வரிஉயர்வு காரணமாக சீனாவும், இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா பதிலடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது பாதுகாப்பு அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து இருப்பது சீனாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அமெரிக்காவின் நடவடிக்கையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும். இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும் நடவடிக்கையாகும்.

    எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், ரஷியாவின் எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது, இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது. இதனால், அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிற்கும் பொருளாதார தடை எச்சரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWar
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் முடிவை ட்ரம்ப் அரசு அமல்படுத்தினால் அதற்கு தக்க பதிலடி தருவோம் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    பெய்ஜிங் :

    டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் பொருட்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தியது.  இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தனர்.  

    மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் ட்ரம்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் இருந்து ட்ரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையில்,  அமெரிக்க அரசு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான சுமார் 800 பொருட்களுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதித்திருந்தது.  

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது.  

    இதற்கிடையே, சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கெங் ஷுவாங் கூறுகையில், சீனாவின் சட்ட அடிப்படையிலான உரிமைகள் மற்றும் பலன்களை காக்க நிச்சயம் அமெரிக்காவிற்கு பதிலடி தரப்படும் என கூறினார்.  எனினும், பதிலடி என்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    சீனப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. #TradeWar #USChinaTradeWar
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,  சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார்.  

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.



    சீனாவின் இந்த வரிவிதிப்பு வர்த்தக சமநிலையை பாதிப்பதாக அமெரிக்க கூறி வந்த நிலையில், சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

    சீனாவின் ஏற்றுக்கொள்ள முடியாத வரி விதிப்பு காரணமாக, புதிய வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் சீன அரசு தனது நியாயமற்ற நடைமுறைகளை மாற்றி, அதன் சந்தைகளை அமெரிக்க பொருட்களுக்கு திறந்து, அமெரிக்காவுடன் சமநிலையான வர்த்தக உறவை ஏற்றுக்கொள்ளும் வகையில், மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.  #TradeWar #USChinaTradeWar #TrumpExtraTariffs #TariffOnChineseGoods
    இருநாடுகளுக்கு இடையே வர்த்தக தகராறு இருந்து வந்த நிலையில், பல தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. #TradeWar #US #China
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு நாடுகளுக்கும் வர்த்தக தகராறு தொடங்கியது. இதன் காரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களின் மீது பல்வேறு வரிகளை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவில் இருந்து  சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 128 அமெரிக்க பொருட்களின் மீது அதிக வரிகளை அந்நாடு விதித்தது. இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் மூலம் அபாயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப்போரை தவிர்க்கும் நோக்கில் வாஷிங்டன் நகரில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் மீதான வரி விதிப்பை குறைத்துகொள்வதாக அமெரிக்கா தெரிவித்தது.

    இதைத்தொடர்ந்து, அதிகரித்துவரும் சீன நுகர்வோர்களின் தேவைகள் மற்றும் அதை ஈடு செய்ய தேவைப்படும் உயர்தர பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்யப்படும் என சீனா தரப்பில் பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்டுள்ளது.

    அறிவுசார் பொருட்களின் காப்புரிமைகளை தவறாக பயன்படுத்தாமல் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தகத்தை அதிகரிப்பது, இறக்குமதி பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியை இரண்டு நாடுகளும் குறைத்துக்கொள்வது, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற முக்கிய முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா சார்பில், வணிகத்துறை செயலாளர் வில்புர் எல்.ரோஸ் மற்றும் அமெரிக்க வணிக பிரதிநிதி ராபர்ட் இ.லைத்திசர் ஆகியோரும், சீனாவின் தரப்பில் அதிபரின் சிறப்பு அதிகாரி லியூ ஹீவும் இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சீன தொலைதொடர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது தொழிலை அமெரிகாவில் தொடங்க உதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். #TradeWar #US #China
    ×