search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft of goods"

    • மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.‌
    • மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிபட்டி மங்களம் நகரை சேர்ந்தவர் பெலிப்ஸ் பெர்னாண்டஸ் (வயது 28).

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார்.

    மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த பெலிப்ஸ் பெர்னாண்டஸ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள், உண்டியல் பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.

    இது குறித்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார்.
    • அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது

    தேனி:

    தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் செல்வம்(51). இவர் பொம்மை விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிகிடந்தது. அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • பெருமாள் என்ற காவலாளி பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    • பூட்டை உடைக்க முடியாத நிலையில் அங்கு இருந்த ஏ.சி. எந்திரத்தின் காப்பர் ஒயரை வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த தமிழக பகுதி யான ஆரோவில் அருகே உள்ள மொரட்டாண்டி பகுதியில் வசதி படைத்தவர்கள் ஆங்காங்கே காலி மனை பிளாட்டுகளை வாங்கி பல அடி உயரம் சுவர்களை எழுப்பி உள்ளே மரம் செடிகளை வளர்த்து பார்ம் லேண்டை உருவாக்கி வைத்துள்ளனர்.

    பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வர்களே அதிகம் இடங்களை வாங்கி காம்ப வுண்டு சுவரை எழுப்பி பாதுகாத்து வருகின்றனர். ஒரு சில பார்ம் லேண்டில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டி ருக்கிறது. ஒரு சில இடங்களில் இல்லை.

    இந்நிலையில் சுமார் 20 அடி உயர முள்ள காம்ப வுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரவு நேரங்களில் பெருமாள் என்ற காவலாளி பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று இரவு பார்ம் லேண்டின் பின்புறம் காம்பவுண்ட் சுவரில் ஏரி குதித்த மர்ம நபர்கள் உள்ளே அறையில் இருந்த புதிதாக வாங்கப் பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி. டி.வி., ஏ.சி. இணைப்பில் இருந்த காப்பர் வயர்கள் மற்றும் அறையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை சாக்கில் கட்டி திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கார்த்தி கேயனின் பார்ம் லேண்ட் பிளாட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டின் பூட்டை அந்த கும்பல் உடைத்துள்ளது. பூட்டை உடைக்க முடியாத நிலையில் அங்கு இருந்த ஏ.சி. எந்திரத்தின் காப்பர் ஒயரை வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.

    அடுத்தடுத்த பிளாட்டுக்களில் இருந்த பொருட்கள் ஒரே இரவில் திருட்டு போன சம்பவத்தால் அந்தப் பகுதியில் இடம் வாங்கிய தொழில் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் அங்கு உள்ள காம்ப்ளக்ஸ்சில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அங்கு கல்லா பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம், ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்ட பொட்டலங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதேபோல் பேக்கரியின் மேல் பகுதியில் கணேசன் (45) என்பவர் சலூன் கடை வைத்துள்ளார். அங்கும் பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ( வயது 44). இவர் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் சாலையில் காஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் லாரி ஆபீஸ் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி இவரது அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக நேற்று கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்து பார்த்தபோது, அலுவலகத்தில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சில நபர்கள் கடைகளில் பொருட்களை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிறுனத்தில் பொருட்கள் திருடுபோனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீளமேடு,

    கோவை ராமானுஜ நகரை சேர்ந்தவர் வசந்த் (வயது 39). இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடித்து விட்டு நிறுவனத்தை பூட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் காப்பர் வயர், ட்ரில்லிங் எந்திரம் மற்றும் கிரைண்டர் உள்பட பல பொருட்களை திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.20, அயிரம் ஆகும்.

    மறுநாள் காலை வழக்கம்போல பணிக்கு வந்தபோது நிறுனத்தில் பொருட்கள் திருடுபோய் இருந்ததை கண்டு வசந்த் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×