என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Break the door"

    • நவம்மாள் காப்பேர் கிராமம் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி
    • ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் கிராமம் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    ஜெயமூர்த்தியின் வீடு சேதமடைந்ததால் அந்த வீட்டை பூட்டி விட்டு புதுவை ரெட்டியார் பாளையம் டீச்சர் காலனியில் உறவினர் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நவமால் காப்பேர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த ஜெயமூர்த்தியின் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஜெயமூர்த்தியின் சகோதரர் தயாளன் ஜெயமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஜெயமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    • மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.‌
    • மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிபட்டி மங்களம் நகரை சேர்ந்தவர் பெலிப்ஸ் பெர்னாண்டஸ் (வயது 28).

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார்.

    மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த பெலிப்ஸ் பெர்னாண்டஸ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள், உண்டியல் பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.

    இது குறித்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயன் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடையின் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவிலிருந்த பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்த பதிவுகளை வைத்து பேக்கரியில் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×