search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே வீடுபுகுந்து பொருட்கள் கொள்ளை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே வீடுபுகுந்து பொருட்கள் கொள்ளை

    • சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார்.
    • அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது

    தேனி:

    தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் செல்வம்(51). இவர் பொம்மை விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிகிடந்தது. அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×