search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide case"

    • புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கு ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
    • கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சன்விடுதி யைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரிக்கண்ணு (வயது 40). கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர்.

    அதில் ஒருவர் அரிமளத்தில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். தாயுடன் வசித்து வந்த இருவரும் அரசுப் பள்ளிகளில் முறையே பிளஸ்-2 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்நிலையில், சித்தன்னவாசல் அருகே உள்ள கல்குவாரி பள்ளத்தில் குதித்து மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரும் ஜூலை 3-ந்தேதி தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் மாரிக்கண்ணுடன் மாஞ்சன் விடுதியை சேர்ந்த கருப்பையா (36) கூடா நட்பு வைத்திருந்ததோடு அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் வாங்கிக்கொண்டு கொடுக்க மறுத்து வந்ததுடன் அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து கருப்பையா மீது தற்கொலைக்கு தூண்டுதல் போக்சோ, மோசடி ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு ஆலங்குடி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ராமாபுரத்தில் மனைவி-குழந்தைகள் தற்கொலை வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ராமாபுரம் ராயலா நகர் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரை வயது44 அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி அபிதா (28).

    இவர்களுக்கு லட்சுமி நாராயணன் (10) ஸ்ரீமகா லட்சுமி (6) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    கடந்த மாதம் 23-ந்தேதி அபிதா நான் எந்த விதத்திலும் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்று கணவர் செந்தாமரைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தற்கொலை சம்பவத்தில் தீடீர் திருப்பமாக அபிதாவின் தாய் சாந்தா தியாகராய நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமாரிடம் நேற்று புகார் மனு அளித்தார் அதில் எனது மகள் அபிதா மற்றும் குழந்தைகள் சாவிற்கு கணவர் செந்தாமரை தான் காரணம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதன்பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன், செந்தாமரையை கைது செய்தார்.

    கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #DSPVishnupriya #CBI
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பல கட்ட விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.



    சி.பி.ஐ. அறிக்கைக்கு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் வழக்கை விசாரிக்க வலியுறுத்தினார்.

    இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நடராஜன் வழக்கை விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. நீதிபதி கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மேலும் இந்த வழக்கில் மேலும் அவகாசம் வழங்க முடியாது என்றும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI

    பொன்னேரி அருகே குடும்பத்தகராறில் காதல் திருமணம் செய்த கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்தவர் ஜெய் வெங்கடேஷ் (வயது 24). லிப்ட் மெக்கானிக். இவரும் வாணியம்பாடியைச் சேர்ந்த தனலட்சுமியும் (20) கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பு மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    நள்ளிரவில் ஜெய் வெங்கடே‌ஷன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தனலட்சுமி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று இறந்தார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஜெய் வெங்கடேசனும், தனலட்சுமியும் தற்கொலை செய்து கிடப்பது தெரிந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனலட்சுமி உடல் முழுவதும் மண்ணெணையாக இருந்தது. முதலில் அவர் மண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் அதனை செய்ய முடியாமல் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

    ஜெய் வெங்கடேசனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர்கள் வீட்டில் கேக் வாங்கி வைத்திருந்தனர். காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #suicidecase

    ×