search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "separate incidents"

    • வெவ்வேறு சம்பவங்களில் மோட்டார் சைக்கிள்-செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.

    மதுரை

    மதுரை சர்வேயர் காலனி பாண்டியன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் சவுந்தரபாண்டியன் (வயது40). இவர் வீட்டில் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மர்ம நபர்கள் அதனை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருப்பாலை போலீசில் சவுந்தர பாண்டியன் புகார் செய்தார். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது உச்சபரம்புமேடு மாமா நகர் முதல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விவேக் ராஜா (27) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலூர் சத்தியமூர்த்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி (41). இவர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அண்ணாநகர் யாகப்பாநகர் 3-வதுதெரு மாரி மகன் காளீஸ்வரன் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.
    • வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் கிருஷ்ணம்பா ளையம் காலனியை சேர்ந்த வர் சரண் (20). இவர் சோப் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    சரணின் அக்காவிற்கு திருமண வரன் பார்ப்ப தற்காக குடும்பத்தினர் அனைவரும் திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றனர். வீட்டில் சரண் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சரணின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியபோது திறக்க வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த குடும்ப த்தினர் ஜன்னல் வழியே பா ர்த்த போது சரண் வீட்டின் மேற்கூரை ஆங்கிள் கம்பியில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரணி னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரணினின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுத்தம்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (28). இவர் தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    ராஜேந்திரன் மதுப்ப ழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அடிக்கடி வயிற்கு வலியால் அவதி ப்பட்டு வந்தார். கடந்த 6 மாதமாக தனியார் மருத்துவ மனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு ராஜேந்திரன் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ராஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜே ந்தி ரனுக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், 2½ வயதில் மகன் உள்ளனர்.

    • உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்காள மாநிலம் திக் நகரை சேர்ந்தவர் பிரசாந்த்ஜித் பெளரி. இவரது மனைவி அர்ச்சனா பெளரி (32). கணவன், மனைவி இருவரும் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த ஒரு கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்த்து வந்தனர். விஜயமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் புத்தாண்டு என்பதால் கம்பெனிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் கணவன் -மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பிரசாந்த்ஜித் கோபித்து கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த அர்ச்சனா பெளரி ஆத்தி ரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றினர்.

    உடனடியாக ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அர்ச்சனா பெளரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் கிளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி தங்கமணி.

    இவர்களுக்கு ஒரு மகளும், ரஞ்சித் (25) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ரஞ்சித்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த 3 வருடமாக ரஞ்சித் வயிற்று வலியால் அவதி அடைந்து அதற்கு மாத்திரை எடுத்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சித்தின் தாய் மற்றும் தந்தை மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    ரஞ்சித் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலை ரஞ்சித்தின் பெற்றோர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவு தாழிடப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரஞ்சித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×