search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெவ்வேறு சம்பவங்களில்"

    • ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் பால க்கரை பீம நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 65). இவரது மகள் ஜாஸ்மின் (22). இவரை உறவினரான ஈரோடு பெரிய அக்ரஹாரம், விஜிபி நகரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவருக்கு கடந்த 2020ல் திருமணம் செய்து கொடுத்தனர்.

    இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சாகுல் அமீது குடியிருக்கும் வீட்டில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஜாஸ்மின் தண்ணீர் பிடித்து வருவா ராம்.

    இதனால் வேறு வீடு மாற்றுமாறு ஜாஸ்மின் தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாகுல் அமீது தூங்கி விழித்து பார்த்த போது ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாஸ்மினை பரிசோ தித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் இதுகுறித்து ஜாஸ்மினின் தந்தை முகமது இப்ராஹிம் அளித்த புகா ரின் பேரில் கருங்கல்பா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி சுமார் மூன்றரை ஆண்டுக ளேயாவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமாரசாமி வீதியைச் சேர்ந்தவர் இம்ரான் (35). எல்.ஐ.சி. முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின் பானு (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இம்ரான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் பெற்று நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகில் இடம் வாங்கியுள்ளார். இதனால் வங்கிக் கடனை செலுத்தவும், குடும்பத்தை பராமரிக்கவும் போதிய வருமானமின்றி இம்ரான் கடும் மன உளை ச்சலுக்குள்ளாகி உள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இம்ரானை அவரது குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இம்ரான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை அடுத்த பெரியவேட்டு வபாளை யத்தைச் சேர்ந்த சென்னி யப்பன் மகன் குருசாமி (46). கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரேமாதேவி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    குருசாமி உடல் நிலை பாதிக்கபட்டு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் வேலை க்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். இதனால் மனமுடைந்த குருசாமி சம்பவத்தன்று கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகு றித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக் கிராமம், கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

    இதையடுத்து அவர் அந்தியூர் எண்ணமங்கலம் ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் தனது மகன் பழனிசாமி (40) வீட்டில் வசித்து வந்தார். பழனிசாமி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னு சாமிக்கு உடல் நலம் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளார்.

    பொன்னுசாமி அடிக்கடி, அவரது அக்கா வீட்டுக்கு சென்று சில நாள்கள் தங்கி விட்டு பின்னர் மகன் வீட்டுக்கு வருவது வழக்க மாம்.

    அப்படி தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கடந்த 20-ந் தேதி கூறி விட்டு சென்ற பொன்னுசாமி 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லையாம்.

    இதையடுத்து, அவரது அக்காள் மாதம்மாளிடம் விசாரித்த போது அவர், அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பொன்னுசாமி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், கோவிலூர் புதுக்கரடு, வறட்டுமலை வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக மகன் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உறவினர்க ளுடன் அங்கு சென்ற பழனிசாமி அழுகிய நிலை யில் இருந்த தனது தந்தை பொன்னுசாமியின் சடலத்தை மீட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (43). இவர்களது மகள் சவுந்தர்யா. இவரை, வளர்மதியின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சவுந்தர்யா கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இதனால், தந்தை கருப்பு சாமி மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமை யாகி தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தனது மகளின் நிலை குறித்த விரக்தியில் மதுபோதையில் கருப்புசாமி புலம்பிக் கொண்டிருந்துள்ளார்.

    பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை வளர்மதி எழுந்து பார்த்தபோது கருப்புசாமி, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கருப்புசாமி இறந்து விட்ட தாக தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் புதிய கட்டிட வளாகத்தில், இரும்புக் கம்பியில் தூக்கி ட்ட நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தொங்கிக் கொண்டி ருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    தூக்கில் தொங்கிய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரிய வில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பழனிச்சாமி அவரது வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிறுவலூர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவரது மனைவி பிரேமலதா (26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனி யில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்த ரமேஷ் மனைவி பிரே மலதாவிடம் தகராறில் ஈடு பட்டார். இதையடுத்து பிரே மலதா குழந்தைகளுடன் தூங்க சென்றார்.

    இந்நிலையில் அதிகா லையில் பிரேமலதா எழுந்து பார்த்தபோது ரமேஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

    பின்னர் இது குறித்து பிரேமலதா சிறுவ லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சின்ன குளத்து தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் பழனி ச்சாமி (63). இவருக்கு திரும ணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி அவரது வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.

    இதையடுத்து அவ ரது உறவினர்கள் பழனிச்சா மியை மீட்டு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் பழனி ச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து உறவினர் அன்பழகன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் ஜெகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கன்னியாகுமரி மாவ ட்டம் கிளியூர் முன்சிறை, பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (27). கேரளாவில் உள்ள பூஞ்சாரு என்ற இடத்தில் தங்கி கட்டி ட வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி ஜெகன் அவரது தம்பி பிரகாசுக்கு போன் செய்து ஓணம் பண்டிகை க்காக ஊருக்கு வருவதாக கூறினார். அதன் பின்னர் அவர் போன் செய்யவில்லை. அதன்பின் ஜெகன் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் ஜெகன் ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட உறவினர் ஒருவர் வீட்டில் 4 நாட்களாக தங்கி உள்ளார்.

    நிலையில் சம்பவத்தன்று உறவினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் ஜெகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக ஈரோடு அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பெரிய அக்ர ஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (26). இவரது மனைவி புவனா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கார்த்திகேயன் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடை யே பிரச்சனை ஏற்பட்டு மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புவனா வுக்கு போன் செய்து உனது வீட்டில் துர்நாற்றம் பேசு வதாக கூறினார். உடனடியாக அவரது மனைவி உறவினருடன் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். பதில் ஏதும் வராததால் ஜன்னல் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கார்த்திகேயன் தூக்கு போட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் அந்தரகி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(24). இவர் ஈரோடு மாவட்டம் வேப்பம் பாளையம் பிரிவில் தங்கி அங்குள்ள காபி கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவர் தினமும் குடித்துவிட்டு தனது அம்மாவிடம் போனில் சண்டை போட்டு வந்துள்ளார். நிலையில் சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த அறையின் அருகே உள்ள கழிப்பறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்தில் தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சீதம்மாள் காலனி, நாகர் பாளையம் ரோட்டை சேர்ந்த வர் செந்தில் (43). இவரது மனைவி தன லட்சுமி. இவ ர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில் ரிக் வண்டி டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.

    செந்திலுக்கு குடிப்ப ழக்கம் இருந்துள்ளது. தின மும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடை யே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்துள்ளது. அவரது மனைவியும், மகனும் செந்தி லிடம் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் செந்தில் குடித்துவிட்டு வீட்டு க்கு வந்துள்ளார். மாலை குடிபோதையில் மகனை டியூசனுக்கு அழை த்து செல்வதாக கூறினார். அதற்கு அவரது மனைவி வேண்டாம் நானே அழைத்து செல்கிறேன் என்று கூறி னார். இதனால் கணவன்-மனைவிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அவரது மகன் தானாகவே டியூஷன் சென்று விட்டார். பின்னர் இரவு அவரது மனைவி டியூசனில் இருந்து மகனை அழைத்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ள ஒரு அறை யில் செந்தில் தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழியிலேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் வித்யகுமார் (44). இவரது மனைவி ஜெப நாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வித்ய குமார் மது பழக்கத்துக்கு அடிமையாகி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் கடந்த 6 வருட மாக அவரது மனைவியும், மகள்கள் 2 பேரும் வித்யகுமாரிடம் கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று வாசித்து வந்தனர். வித்யகுமார் தினமும் அவரது அம்மா வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சென்று வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வித்யகுமாருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. தனியார் மருத்து வமனையில் சிகிச்சை செய்தபோது டாக்டர் இனி மது அருந்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அதை காதில் வா ங்கி கொள்ளாமல் மீண்டும் பழையபடி வித்யகுமார் மது அருந்த தொடங்கினார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று வித்யகுமார் மட்டு ம் வீட்டில் இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியே சென்று விட்டனர். பின்னர் அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் வித்யகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் இருந்த வர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வித்யகுமார் இறந்து விட்டதாக தெரிவி த்தார். இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.
    • வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் கிருஷ்ணம்பா ளையம் காலனியை சேர்ந்த வர் சரண் (20). இவர் சோப் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    சரணின் அக்காவிற்கு திருமண வரன் பார்ப்ப தற்காக குடும்பத்தினர் அனைவரும் திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றனர். வீட்டில் சரண் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சரணின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியபோது திறக்க வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த குடும்ப த்தினர் ஜன்னல் வழியே பா ர்த்த போது சரண் வீட்டின் மேற்கூரை ஆங்கிள் கம்பியில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரணி னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரணினின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுத்தம்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (28). இவர் தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    ராஜேந்திரன் மதுப்ப ழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அடிக்கடி வயிற்கு வலியால் அவதி ப்பட்டு வந்தார். கடந்த 6 மாதமாக தனியார் மருத்துவ மனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு ராஜேந்திரன் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ராஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜே ந்தி ரனுக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், 2½ வயதில் மகன் உள்ளனர்.

    • வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோடு கோவிந்தராஜன் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் சந்துரு (36). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதனால் சந்துரு குடி பழக்கத்திற்கு அடிமையாகி விரக்தியில் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சந்துருவின் நண்பர் உதவியுடன் சந்துருவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு வெள்ளியங்கிரி (37) என்ற மகனும், கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர்.

    இதில் கலைச்செல்வி தாளவாடியில் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

    வெள்ளியங்கிரி வெட்டுக்காட்டுவலசில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். பெருமாளும், சரஸ்வதியும் இந்திரா காந்தி வீதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெருமாளுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எது சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த அவஸ்தை காட்டிலும் செத்துப்போவது மேல் என அடிக்கடி பெருமாள் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று பெருமாள் வீட்டில் இருந்த சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார்.அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த பழமங்கலத்தை சேர்ந்தவர் வீரன் (65). இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.

    மகன் வேலுசாமி என்பவருடன் வீரன் வசித்து வந்தார். வீரனுக்கு கடந்த 10 ஆண்டாக வயிற்று வலி இருந்தது. இதற்காக அவர் குடலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னும் வலி குறையவில்லை. வீரனுக்கு மது பழக்கமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிறு வலி அதிகமாக இருந்ததால் வெறுப்படைந்த வீரன் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்காள மாநிலம் திக் நகரை சேர்ந்தவர் பிரசாந்த்ஜித் பெளரி. இவரது மனைவி அர்ச்சனா பெளரி (32). கணவன், மனைவி இருவரும் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த ஒரு கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்த்து வந்தனர். விஜயமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் புத்தாண்டு என்பதால் கம்பெனிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் கணவன் -மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பிரசாந்த்ஜித் கோபித்து கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த அர்ச்சனா பெளரி ஆத்தி ரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றினர்.

    உடனடியாக ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அர்ச்சனா பெளரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் கிளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி தங்கமணி.

    இவர்களுக்கு ஒரு மகளும், ரஞ்சித் (25) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ரஞ்சித்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த 3 வருடமாக ரஞ்சித் வயிற்று வலியால் அவதி அடைந்து அதற்கு மாத்திரை எடுத்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சித்தின் தாய் மற்றும் தந்தை மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    ரஞ்சித் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலை ரஞ்சித்தின் பெற்றோர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவு தாழிடப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரஞ்சித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார்.
    • இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரியசேமூர், ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவரது மனைவி உமாதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    விஜயகுமார் மருத்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். விஜயகுமார் தனது மனைவி மகன்கள் மற்றும் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மனைவி, மகன்கள் வீட்டுக்கு வந்த போது விஜயகுமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவானி அடுத்த குருப்ப நாயக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(27). ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பார்சல் பண்ணும் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

    இதனால் கடந்த சில நாட்களாக சரவணன் மனவருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் சம்பவத்தன்று சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி வர்ணபுரம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(21). தமிழரசன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு டைப்ரைட்டிங் கிளாசுக்கு போயிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் மேல் படிப்பு படிக்க விருப்பப்பட்டு தமிழ்செ ல்வன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் தங்களிடம் மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லை என்று அவரது பெற்றோர் கூறிவிட்டனர்.

    இதனால் தமிழரசன் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தமிழரசன் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தமிழரசன் அனுமதிக்க ப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (31). இவருக்கும் புளியம்பட்டி அருகே உள்ள குரும்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த அம்சவேணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்து கொண்டு அம்சவேணி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் லோகநாதன் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து உள்ளார். தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லோகநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×