search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
    X

    வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

    • வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோடு கோவிந்தராஜன் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் சந்துரு (36). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதனால் சந்துரு குடி பழக்கத்திற்கு அடிமையாகி விரக்தியில் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சந்துருவின் நண்பர் உதவியுடன் சந்துருவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு வெள்ளியங்கிரி (37) என்ற மகனும், கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர்.

    இதில் கலைச்செல்வி தாளவாடியில் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

    வெள்ளியங்கிரி வெட்டுக்காட்டுவலசில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். பெருமாளும், சரஸ்வதியும் இந்திரா காந்தி வீதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெருமாளுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எது சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த அவஸ்தை காட்டிலும் செத்துப்போவது மேல் என அடிக்கடி பெருமாள் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று பெருமாள் வீட்டில் இருந்த சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார்.அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த பழமங்கலத்தை சேர்ந்தவர் வீரன் (65). இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.

    மகன் வேலுசாமி என்பவருடன் வீரன் வசித்து வந்தார். வீரனுக்கு கடந்த 10 ஆண்டாக வயிற்று வலி இருந்தது. இதற்காக அவர் குடலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னும் வலி குறையவில்லை. வீரனுக்கு மது பழக்கமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிறு வலி அதிகமாக இருந்ததால் வெறுப்படைந்த வீரன் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×