search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "different incidents"

    • ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் பால க்கரை பீம நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 65). இவரது மகள் ஜாஸ்மின் (22). இவரை உறவினரான ஈரோடு பெரிய அக்ரஹாரம், விஜிபி நகரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவருக்கு கடந்த 2020ல் திருமணம் செய்து கொடுத்தனர்.

    இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சாகுல் அமீது குடியிருக்கும் வீட்டில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஜாஸ்மின் தண்ணீர் பிடித்து வருவா ராம்.

    இதனால் வேறு வீடு மாற்றுமாறு ஜாஸ்மின் தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாகுல் அமீது தூங்கி விழித்து பார்த்த போது ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாஸ்மினை பரிசோ தித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் இதுகுறித்து ஜாஸ்மினின் தந்தை முகமது இப்ராஹிம் அளித்த புகா ரின் பேரில் கருங்கல்பா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி சுமார் மூன்றரை ஆண்டுக ளேயாவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமாரசாமி வீதியைச் சேர்ந்தவர் இம்ரான் (35). எல்.ஐ.சி. முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின் பானு (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இம்ரான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் பெற்று நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகில் இடம் வாங்கியுள்ளார். இதனால் வங்கிக் கடனை செலுத்தவும், குடும்பத்தை பராமரிக்கவும் போதிய வருமானமின்றி இம்ரான் கடும் மன உளை ச்சலுக்குள்ளாகி உள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இம்ரானை அவரது குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இம்ரான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை அடுத்த பெரியவேட்டு வபாளை யத்தைச் சேர்ந்த சென்னி யப்பன் மகன் குருசாமி (46). கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரேமாதேவி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    குருசாமி உடல் நிலை பாதிக்கபட்டு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் வேலை க்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். இதனால் மனமுடைந்த குருசாமி சம்பவத்தன்று கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகு றித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக் கிராமம், கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

    இதையடுத்து அவர் அந்தியூர் எண்ணமங்கலம் ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் தனது மகன் பழனிசாமி (40) வீட்டில் வசித்து வந்தார். பழனிசாமி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னு சாமிக்கு உடல் நலம் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளார்.

    பொன்னுசாமி அடிக்கடி, அவரது அக்கா வீட்டுக்கு சென்று சில நாள்கள் தங்கி விட்டு பின்னர் மகன் வீட்டுக்கு வருவது வழக்க மாம்.

    அப்படி தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கடந்த 20-ந் தேதி கூறி விட்டு சென்ற பொன்னுசாமி 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லையாம்.

    இதையடுத்து, அவரது அக்காள் மாதம்மாளிடம் விசாரித்த போது அவர், அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பொன்னுசாமி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், கோவிலூர் புதுக்கரடு, வறட்டுமலை வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக மகன் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உறவினர்க ளுடன் அங்கு சென்ற பழனிசாமி அழுகிய நிலை யில் இருந்த தனது தந்தை பொன்னுசாமியின் சடலத்தை மீட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (43). இவர்களது மகள் சவுந்தர்யா. இவரை, வளர்மதியின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சவுந்தர்யா கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இதனால், தந்தை கருப்பு சாமி மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமை யாகி தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தனது மகளின் நிலை குறித்த விரக்தியில் மதுபோதையில் கருப்புசாமி புலம்பிக் கொண்டிருந்துள்ளார்.

    பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை வளர்மதி எழுந்து பார்த்தபோது கருப்புசாமி, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கருப்புசாமி இறந்து விட்ட தாக தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் புதிய கட்டிட வளாகத்தில், இரும்புக் கம்பியில் தூக்கி ட்ட நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தொங்கிக் கொண்டி ருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    தூக்கில் தொங்கிய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரிய வில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோடு கோவிந்தராஜன் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் சந்துரு (36). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதனால் சந்துரு குடி பழக்கத்திற்கு அடிமையாகி விரக்தியில் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சந்துருவின் நண்பர் உதவியுடன் சந்துருவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு வெள்ளியங்கிரி (37) என்ற மகனும், கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர்.

    இதில் கலைச்செல்வி தாளவாடியில் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

    வெள்ளியங்கிரி வெட்டுக்காட்டுவலசில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். பெருமாளும், சரஸ்வதியும் இந்திரா காந்தி வீதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெருமாளுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எது சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த அவஸ்தை காட்டிலும் செத்துப்போவது மேல் என அடிக்கடி பெருமாள் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று பெருமாள் வீட்டில் இருந்த சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார்.அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த பழமங்கலத்தை சேர்ந்தவர் வீரன் (65). இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.

    மகன் வேலுசாமி என்பவருடன் வீரன் வசித்து வந்தார். வீரனுக்கு கடந்த 10 ஆண்டாக வயிற்று வலி இருந்தது. இதற்காக அவர் குடலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னும் வலி குறையவில்லை. வீரனுக்கு மது பழக்கமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிறு வலி அதிகமாக இருந்ததால் வெறுப்படைந்த வீரன் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார்.
    • இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரியசேமூர், ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவரது மனைவி உமாதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    விஜயகுமார் மருத்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். விஜயகுமார் தனது மனைவி மகன்கள் மற்றும் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மனைவி, மகன்கள் வீட்டுக்கு வந்த போது விஜயகுமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவானி அடுத்த குருப்ப நாயக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(27). ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பார்சல் பண்ணும் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

    இதனால் கடந்த சில நாட்களாக சரவணன் மனவருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் சம்பவத்தன்று சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி வர்ணபுரம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(21). தமிழரசன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு டைப்ரைட்டிங் கிளாசுக்கு போயிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் மேல் படிப்பு படிக்க விருப்பப்பட்டு தமிழ்செ ல்வன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் தங்களிடம் மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லை என்று அவரது பெற்றோர் கூறிவிட்டனர்.

    இதனால் தமிழரசன் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தமிழரசன் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தமிழரசன் அனுமதிக்க ப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (31). இவருக்கும் புளியம்பட்டி அருகே உள்ள குரும்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த அம்சவேணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்து கொண்டு அம்சவேணி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் லோகநாதன் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து உள்ளார். தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லோகநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×