search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

    • ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் பால க்கரை பீம நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 65). இவரது மகள் ஜாஸ்மின் (22). இவரை உறவினரான ஈரோடு பெரிய அக்ரஹாரம், விஜிபி நகரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவருக்கு கடந்த 2020ல் திருமணம் செய்து கொடுத்தனர்.

    இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சாகுல் அமீது குடியிருக்கும் வீட்டில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஜாஸ்மின் தண்ணீர் பிடித்து வருவா ராம்.

    இதனால் வேறு வீடு மாற்றுமாறு ஜாஸ்மின் தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாகுல் அமீது தூங்கி விழித்து பார்த்த போது ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாஸ்மினை பரிசோ தித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் இதுகுறித்து ஜாஸ்மினின் தந்தை முகமது இப்ராஹிம் அளித்த புகா ரின் பேரில் கருங்கல்பா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி சுமார் மூன்றரை ஆண்டுக ளேயாவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமாரசாமி வீதியைச் சேர்ந்தவர் இம்ரான் (35). எல்.ஐ.சி. முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின் பானு (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இம்ரான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் பெற்று நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகில் இடம் வாங்கியுள்ளார். இதனால் வங்கிக் கடனை செலுத்தவும், குடும்பத்தை பராமரிக்கவும் போதிய வருமானமின்றி இம்ரான் கடும் மன உளை ச்சலுக்குள்ளாகி உள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இம்ரானை அவரது குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இம்ரான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை அடுத்த பெரியவேட்டு வபாளை யத்தைச் சேர்ந்த சென்னி யப்பன் மகன் குருசாமி (46). கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரேமாதேவி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    குருசாமி உடல் நிலை பாதிக்கபட்டு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் வேலை க்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். இதனால் மனமுடைந்த குருசாமி சம்பவத்தன்று கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகு றித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×