search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை
    X

    வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை

    • விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார்.
    • இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த பெரியசேமூர், ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவரது மனைவி உமாதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    விஜயகுமார் மருத்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். விஜயகுமார் தனது மனைவி மகன்கள் மற்றும் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மனைவி, மகன்கள் வீட்டுக்கு வந்த போது விஜயகுமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்ப–ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவானி அடுத்த குருப்ப நாயக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(27). ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பார்சல் பண்ணும் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

    இதனால் கடந்த சில நாட்களாக சரவணன் மனவருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் சம்பவத்தன்று சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி வர்ணபுரம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(21). தமிழரசன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு டைப்ரைட்டிங் கிளாசுக்கு போயிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் மேல் படிப்பு படிக்க விருப்பப்பட்டு தமிழ்செ ல்வன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் தங்களிடம் மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லை என்று அவரது பெற்றோர் கூறிவிட்டனர்.

    இதனால் தமிழரசன் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தமிழரசன் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தமிழரசன் அனுமதிக்க ப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (31). இவருக்கும் புளியம்பட்டி அருகே உள்ள குரும்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த அம்சவேணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்து கொண்டு அம்சவேணி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் லோகநாதன் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து உள்ளார். தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லோகநாதன் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×