search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

    • பழனிச்சாமி அவரது வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிறுவலூர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவரது மனைவி பிரேமலதா (26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனி யில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்த ரமேஷ் மனைவி பிரே மலதாவிடம் தகராறில் ஈடு பட்டார். இதையடுத்து பிரே மலதா குழந்தைகளுடன் தூங்க சென்றார்.

    இந்நிலையில் அதிகா லையில் பிரேமலதா எழுந்து பார்த்தபோது ரமேஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

    பின்னர் இது குறித்து பிரேமலதா சிறுவ லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சின்ன குளத்து தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் பழனி ச்சாமி (63). இவருக்கு திரும ணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி அவரது வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.

    இதையடுத்து அவ ரது உறவினர்கள் பழனிச்சா மியை மீட்டு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் பழனி ச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து உறவினர் அன்பழகன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×