search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

    • வீட்டில் ஜெகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கன்னியாகுமரி மாவ ட்டம் கிளியூர் முன்சிறை, பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (27). கேரளாவில் உள்ள பூஞ்சாரு என்ற இடத்தில் தங்கி கட்டி ட வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி ஜெகன் அவரது தம்பி பிரகாசுக்கு போன் செய்து ஓணம் பண்டிகை க்காக ஊருக்கு வருவதாக கூறினார். அதன் பின்னர் அவர் போன் செய்யவில்லை. அதன்பின் ஜெகன் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் ஜெகன் ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட உறவினர் ஒருவர் வீட்டில் 4 நாட்களாக தங்கி உள்ளார்.

    நிலையில் சம்பவத்தன்று உறவினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் ஜெகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக ஈரோடு அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பெரிய அக்ர ஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (26). இவரது மனைவி புவனா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கார்த்திகேயன் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடை யே பிரச்சனை ஏற்பட்டு மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புவனா வுக்கு போன் செய்து உனது வீட்டில் துர்நாற்றம் பேசு வதாக கூறினார். உடனடியாக அவரது மனைவி உறவினருடன் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். பதில் ஏதும் வராததால் ஜன்னல் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கார்த்திகேயன் தூக்கு போட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் அந்தரகி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(24). இவர் ஈரோடு மாவட்டம் வேப்பம் பாளையம் பிரிவில் தங்கி அங்குள்ள காபி கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவர் தினமும் குடித்துவிட்டு தனது அம்மாவிடம் போனில் சண்டை போட்டு வந்துள்ளார். நிலையில் சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த அறையின் அருகே உள்ள கழிப்பறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×