search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people hanged"

    • செந்தில் தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சீதம்மாள் காலனி, நாகர் பாளையம் ரோட்டை சேர்ந்த வர் செந்தில் (43). இவரது மனைவி தன லட்சுமி. இவ ர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில் ரிக் வண்டி டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.

    செந்திலுக்கு குடிப்ப ழக்கம் இருந்துள்ளது. தின மும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடை யே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்துள்ளது. அவரது மனைவியும், மகனும் செந்தி லிடம் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் செந்தில் குடித்துவிட்டு வீட்டு க்கு வந்துள்ளார். மாலை குடிபோதையில் மகனை டியூசனுக்கு அழை த்து செல்வதாக கூறினார். அதற்கு அவரது மனைவி வேண்டாம் நானே அழைத்து செல்கிறேன் என்று கூறி னார். இதனால் கணவன்-மனைவிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அவரது மகன் தானாகவே டியூஷன் சென்று விட்டார். பின்னர் இரவு அவரது மனைவி டியூசனில் இருந்து மகனை அழைத்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ள ஒரு அறை யில் செந்தில் தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழியிலேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் வித்யகுமார் (44). இவரது மனைவி ஜெப நாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வித்ய குமார் மது பழக்கத்துக்கு அடிமையாகி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் கடந்த 6 வருட மாக அவரது மனைவியும், மகள்கள் 2 பேரும் வித்யகுமாரிடம் கோபித்து கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று வாசித்து வந்தனர். வித்யகுமார் தினமும் அவரது அம்மா வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சென்று வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வித்யகுமாருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. தனியார் மருத்து வமனையில் சிகிச்சை செய்தபோது டாக்டர் இனி மது அருந்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அதை காதில் வா ங்கி கொள்ளாமல் மீண்டும் பழையபடி வித்யகுமார் மது அருந்த தொடங்கினார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று வித்யகுமார் மட்டு ம் வீட்டில் இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியே சென்று விட்டனர். பின்னர் அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் வித்யகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் இருந்த வர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வித்யகுமார் இறந்து விட்டதாக தெரிவி த்தார். இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×