search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில பெண் உட்பட"

    • உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்காள மாநிலம் திக் நகரை சேர்ந்தவர் பிரசாந்த்ஜித் பெளரி. இவரது மனைவி அர்ச்சனா பெளரி (32). கணவன், மனைவி இருவரும் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த ஒரு கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்த்து வந்தனர். விஜயமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் புத்தாண்டு என்பதால் கம்பெனிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் கணவன் -மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பிரசாந்த்ஜித் கோபித்து கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த அர்ச்சனா பெளரி ஆத்தி ரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றினர்.

    உடனடியாக ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அர்ச்சனா பெளரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் கிளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி தங்கமணி.

    இவர்களுக்கு ஒரு மகளும், ரஞ்சித் (25) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ரஞ்சித்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த 3 வருடமாக ரஞ்சித் வயிற்று வலியால் அவதி அடைந்து அதற்கு மாத்திரை எடுத்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சித்தின் தாய் மற்றும் தந்தை மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    ரஞ்சித் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலை ரஞ்சித்தின் பெற்றோர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவு தாழிடப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரஞ்சித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×