search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road stir"

    • கடலூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் இறந்த மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலலில் ஈடுபட்டனர்.
    • இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினர் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவரது மகள் பிரவீனா (வயது 18). இவர் கடலூர் அருகே எஸ்.குமராபுரம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று காலை கல்லூரி மாணவி பிரவீனா விடுதியில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார் . தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கல்லூரி மாணவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  நேற்று மாலை இறந்த மாணவியின் பெற்றோர்கள் , உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தடா.தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். .அப்போது அவர்கள் கூறுகையில் , கல்லூரி மாணவி இறந்ததில் மர்மம் உள்ளது . ஆகையால் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் . அப்போது போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் . இதன் காரணமாக கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள தாடூர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், குடிநீர் வழங்கக் கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை இ.என். கண்டிகையில் திருத்தணி- சித்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக மீண்டும் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி உபரி தண்ணீர் வினாடிக்கு 2 ½ லட்சம் கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு உபரி தண்ணீர் கல்லணையில் இருந்து திறக்கப்பட்டது. இதையடுத்து அணைக்கரை கொள்ளிடம் கீழணையின் பாதுகாப்பு குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அணைக்கரை பாலம் வழியாக செல்லும் அனைத்து பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    மேலும் இந்த வழியாக கார்கள் மற்றும் வேன்கள் மட்டுமே சென்று வருகின்றன. இந்த வழியாக செல்லும் பஸ்கள் சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், ராஜமன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து பஸ்களும் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு மாற்று பாதை வழியாக ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் மதனத்தூர் கொள்ளிடம் வழியாக அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. அணையின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மீண்டும் அணைக்கரை பாலம் வழியாக பஸ்கள் இயக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் அப்போது தெரிவித்தனர்.

    இந்நிலையில் மீன்சுருட்டி அடுத்துள்ள ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கும்பகோணம் அரசு கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து அணைக்கரை கீழணை வழியாக பஸ் இயக்க வேண்டும். கனரக வாகனங்கள் மறைமுகமாக சென்று வருகின்றன. பஸ் போக்குவரத்து இயக்க வேண்டும் எனவும், கல்லூரிகளுக்கு செல்ல காலதாமதமும் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை என்று கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார், அணைக்கரை கீழணை பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அணைக்கரை கீழணையை பார்வையிட, சென்னையில் இருந்து பாதுகாப்பு குழு இந்த வாரத்தில் வருவதாகவும், அவர்கள் பார்வையிட்ட பிறகு வருகிற 22-ந்தேதி காலை 9 மணியளவில் அணைக்கரை கீழணை வழியாக மீண்டும் பஸ் இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து மாணவர்கள் 22-ந்தேதி பஸ் வழக்கம் போல் செல்லவில்லை என்றால் மீண்டும் நாங்கள் 24-ந்தேதி காலை சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறி மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு மற்றும் சென்னை-கும்பகோணம், திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது இந்திராநகர் காலனி. இங்கு 40 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் சரிவர வினியோகிக்கவில்லை என்று மக்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் யூனியன் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பழைய வத்தலக்குண்டு பிரிவில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    மறியல் செய்த மக்களிடம் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். #tamilnews
    ×