search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resistance"

    • தங்களுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.
    • தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலு வலக சாலை மற்றும் மஞ்சக்குப்பம் மைதா னத்தை சுற்றிலும் 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஆக்கிரமிப்பு கடைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநக ராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர்கள், தங்க ளுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றாமல் சென்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் சில நாட்களாக ஆக்கிரமிப்பு கடைகளை தாங்களாக அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி ஊழி யர்கள் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடை களை போலீஸ் பாதுகாப்பு டன் பொக்லைன் எந்திரங் கள் மூலம் அகற்றினர். அப்போது அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    இதில் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையே பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதா னப்படுத்தினார். தொடர்ந்து தரைக் கடை மற்றும் தள்ளு வண்டி கடைகளை தவிர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அண்ணா பஸ் நிலைய பகுதியில் 25-ந் தேதி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 25-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி அரசு ராசாசி மருத்துவ மனை, வைகை வடகரை, கோரிப்பளையம், ஐம்பு ரோபுரம், மாரியம்மன் கோவில்தேரு, சின்னக் கண்மாய் தெரு, ஓ.சி.பி.எம். பள்ளி, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, இஸ்மாயிஸ்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, குலமங்கலம் ரோடு, மீனாட்சிபுரம், சத்திய மூர்த்தி 1,2,3,4,5,6,7-வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், நரிமேடு மெயின்ரோடு. சாலை முதலியார் ரோடு, நேரு பள்ளி பகுதிகள்.

    அன்னைநகர், எல்ஐஜி காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தேரு கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா அண்ணாநகர், 80அடி ரோடு, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள், சுந்தரம் தியேட்டர் ரோடு, மானகிரி, சதா சிவநகர், அழகர் கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், அன்பு நகர், தாசில்தார் நகர், மருது பாண்டியர் தெரு, எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

    • அழகர்கோவிலில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    அலங்காநல்லூர்

    அழகர்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொய் கை கரைப்பட்டி, நாயக்கன் பட்டி. அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி தொப் பலாம் பட்டி, கொடிமங்க லம், கருவனூர், தேத்தாம் பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் அரண்மனை, உப்பூர் பகுதியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின்சார உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-2, டவுன்-3, உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இதன் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றி யுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைகள் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்கார தோப்பு, பெரியார் நகர், லாந்தை.

    அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோ னீயர் சுற்று பகுதிகளில், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுளி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின்சார உதவி செயற்பொ றியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    • விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் கஞ்சம் பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராணி தலைமை தாங் கினார். துணைத் தலைவர் அருமை நாயகம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங் கியதும் ஊராட்சி மன்ற செயலாளர் கிராம வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.

    இதனைத் தொடர்ந்து கிராமத்தின் வளர்ச்சி, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொதுமக்கள் தங் கள் பகுதியில் உள்ள குறை கள், மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்து எடுத் துரைத்தனர்.

    பின்னர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கிரா மத்தின் சுற்று பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது வரை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை அழிக்கும் நோக்கில், தங்க ளது சுயலாபத்திற்காக சில விவசாய நிலங்களை அரசு விதிமுறைகளை மீறி வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்ற னர்.

    இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டு மின்றி நிலத்தடி நீரும் பாதிக் கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு எவ்வித அனுமதி வழங்கக் கூடாது. அதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தனது கோரிக்கை மனு வழங்கினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை நகர் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, தெப்பம் துணை மின் நிலையங்களில் நாளை (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பலி, சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகள்.

    தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சிஎம் ஆர் ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தின புரம், பிக்சர் ரோடு. இந்திரா நகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, எம்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மற்றும் திருமகள் நகர்.

    மேற்கண்ட தகவலை மதுரை நகர் மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

    • நடையனூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
    • வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் விவசாயத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் மத்தியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த கோபுரம் அமைப்பதனால் இந்த கோபுரத்தில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கதிர்வீச்சினால் விவசாய நிலமும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறி செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறி வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

    • வாடிப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (20-ந்தேதி) பராம ரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். மின்தடை ஏற்படும் பகுதி கள்:-

    வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம் பட்டி, கச்சைகட்டி, குலசேக ரன்கோட்டை, கோட்டை மேடு. விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்க லிங்கபுரம், இராமை யன்பட்டி நரிமேடு தாதம்பட்டி. தாதப்பநா யக்கன்பட்டி. போடி நாயக்கன்பட்டி, ராம நாயக்கன்பட்டி. கள்ளர்ம டம். வல்லபகணபதிநகர். மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லை யூர். ராமராஜபுரம். கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லா டம்பட்டி, அங்கப்பன் கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சி புரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட். ரிஷபம். திருமா ல்நத்தம் ஆலங்கொட்டாரம், ராய புரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா. அமர டக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர். வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டை யம்பட்டி, தாதக வுண்டன்பட்டி. பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டி மேய்க்கிப்பட்டி.

    அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.புதூர், சித்தா லங்குடி, குத்தாலக்குடி. மூலக்குறிச்சி, வைரவநந்தம், யானைக்குளம், ஆர்.கே. ராக், வைகை ஆயில், கோத்தாரி, நகரி ஏரியா, எஸ்.என்.பி. ஏரியா, தனிச்சியம் அக்ரி.

    இந்த தகவலை சமயநல்லூர் செயற்பொறி யாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • உசிலம்பட்படி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்படி

    உசிலம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படும். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள் உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவர்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள். தும்மக்குண்டு துணை மின் நிலையம்:- சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், திடியன்; வச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, இடையபட்டி துணை மின்நிலையம்:- மாதரை, தொட்டப்பநாயக்கனூர்ரூபவ் இடையபட்டி, நக்கலப்பட்டிரூபவ் பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி மொண்டிக்குண்டு துணைமின்நிலையம்:- உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம் புதூர்.

    இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • நரிக்குடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி, முத்துராமலிங்க புரம், பரளச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நரிக்குடி, முத்துராமலிங்க புரம், பரளச்சி, பொம்மக் கோட்டை, கே.கரிசல்குளம், எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, செட்டிக்குளம், தும்மு சின்னம்பட்டி, பூலாங்கால், இருஞ்சிறை, கட்டனூர், உலக்குடி, நாலூர், வீரசோழன், சேதுபுரம், நல்லுக்குறிச்சி, கல்லுமடம், கத்தாளம்பட்டி, ஆலடிப்பட்டி, வடக்கு நத்தம், இராஜகோபாலபுரம், மேலையூர்,ஆண்டியேந்தல், கல்லூரணி, தொப்ப லாக்கரை, நல்லாங்குளம், குள்ளம்பட்டி, சவ்வாசுபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வா ரிய செயற்பொறி யாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

    • செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் செக்கானூரணி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    மதுரை அருகே உள்ள தேன்கல்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தேன்கல்பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானுாரணி-திருமங்க லம் மெயின் ரோட்டில் உள்ளது.

    இப்பகுதியில் இறந்தவர் களை மயானத்தில் அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிர தாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்ற னர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் இருக்கும் மயானத்தை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மின் மயானமாக மாற்றினால் பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் செய்ய இயலாத நிலை ஏற்படும்.

    மேலும் மின் மயானம் அமைந்தால் நாளடைவில் எங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் படிப்படியாக குறையும். பின்வரும் சந்ததிகளுக்கு இப்பகுதி மக்களின் பாரம் பரியம் தெரியாமல்போகும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதி மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அரசு மாதிரி பள்ளியில் பயோ மேக்ஸ் பாடப்பிரிவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பாடப்பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    அரசு மாதிரி பள்ளிகளில் ஏற்கனவே இருந்தபடி பயோ மேக்ஸ் பாட பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) படித்தால் மருத்துவம் அல்லது என்ஜினீயரிங் படிக்க முடியும். தற்போது 2023-24-ம் கல்வியாண்டில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

    பயோ மேக்ஸ் பாடப் பிரிவை தற்போது பயோ கம்ப்யூட்டர் (இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்),மேக்ஸ் கம்ப்யூட்டர் (இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்) என இரண்டாக பிரித்து மாணவர் சேர்க்கை நடக்கி றது. இம்முறைக்கு மாணவர் கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாண வர்களில் அதிக மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1-ல் சேர்க்கப்படுகின்றனர்.

    2023-24 கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாணவர்கள் விருப்ப பாடமான பயோ மேக்சை இரண்டாக பிரித்து இதில் ஒன்றை தேர்ந்தெ டுக்க வற்புறுத்துகின்றனர்.

    இதில் ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்யும் போது ஒன்று மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியும். அல்லது என்ஜினீயரிங் செல்ல முடியும். முன்பு பயோ மேக்ஸ் பாடத்தை தேர்வு செய்தவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் இரண்டிலும் சேர வாய்ப்பு இருந்தது. தற்போது பிரிக்கப்பட்ட பாடப்பிரிவு நடைமுறையில் அப்படி சேர முடியாது. இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர்கள் கூறுகையில், பிளஸ்- 1 சேரும்போதே மாணவர்கள் டாக்டரா? என்ஜினீயரா? என முடிவு எடுக்குமாறு வற்புறுத்தும் வகையில் பாடப்பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.

    இம்முறையால் ராமநாத புரத்தில் கலந்தாய்வுக்கு வந்த 150 பேரில் 60 பேர் பங்கேற்கவில்லை. இதனால் மாணவர்கள் மன உளச்ச லுக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே முதல்- அமைச்சர் ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், தலையிட்டு பழைய முறைப்படியே மாதிரி பள்ளிகளில் பயோ மேக்ஸ் பாடப்பிரிவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.

    ×