search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ratha Saptami Festival"

    • ரத சப்தமி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.

    ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாளை காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில், 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதன்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறுகிறது.

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரப வாகனத்தில் உலா வருகிறார்.

    ரதசப்தமி விழாவை காண இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.

    • புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.
    • மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் தலைமையில் 10-ம் ஆண்டாக வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி விழா நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அனைவரும் 7 எருக்கன் இலைகளை தலை, இரு கண்கள், இரு தோள்பட்டை, வைத்து வீராம்பட்டினம் கடற்கரையில் ரத சப்தமி தேவியை வணங்கினர்.

    மேலும் 3 முறை கடலில் நீராடினார்கள். பின்பு சூரிய நமஸ்காரம் செய்து வணங்கினார்கள். இதில் சிவ ராமலிங்கம், கலியபெருமாள், செந்தில்நாதன், மனோகர் கூட்டேரிப்பட்டு பொன்முடி, தெள்ளார் சங்கர், சென்னை உமா அம்மையார், சென்னை ஓட்டேரி வெங்கடேசன் , கோவை காலபைரவி அம்மையார் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×