search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police DSP"

    • குடும்ப சூழ்நிலை காரணமாக லோகநாதனின் மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
    • ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து மாணவியை பள்ளியில் சேர்த்தனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள பள்ளிகளில் கல்வி பயிற்று படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ- மாணவிகளை கண்டு அறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில், ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொ ண்டதில் ஆழ்வார் திருநகரி அண்ணா நகரிலுள்ள கூலி தொழிலாளி லோகநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்த மகள் 9-வது வகுப்பும், இரண்டாவது மகள் 8-வது வகுப்பும் நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். உறவினர்கள் மாணவியிடம் பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டதற்கு சரியான பதிலும் சொல்லவில்லை எனவும், மாணவியின் தகப்பனார் லோகநாதன் மதுவுக்கு அடிமையான நிலையில் மகள்களை சரிவர கவனிக்கவில்லை எனவும் உறவினர்கள் வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

    இதன் பெயரில் ஸ்ரீவை குண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் மாணவியின் உறவினர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று அறிவுரை வழங்கியதில் மேற்கொண்டு படிக்க ஒத்துகொண்ட நிலையில் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் காவல்துறையினர் சார்பில் வாங்கி கொடுத்து பள்ளிக்கு அவரது காரில் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பள்ளியில் சேர்த்தனர். மேலும் மாணவி சம்பந்தப்பட்ட தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என கூறி வந்தனர். மேலும் மாணவியின் தகப்பனார் லோகநாதன் குடிப்பழக்க த்தில் இருந்து விடுபட்டு மகள்களை சரியாக கவனிக்கவும் அறிவுரைகள் கூறினார்கள்.

    ஏற்கனவே கருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆழ்வார் திருநகரி டீக்கடையில் வேலை பார்த்து வந்ததும் அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க டி.எஸ்.பி. மாயவன் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    குரூப் 1 தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37).இவரது தந்தை பெயர் ராமன், தாயின் பெயர் சிந்தாமணி இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வளையகாரன் வலசு.

    இவர் பிஎஸ்ஸி (கணிதம்)எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 17.01.2002 முதல் இன்று வரை 17 வருடங்களாக அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார் இவர் ஐ.ஏ.எஸ். கனவுடன் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளும் எழுதியுள்ளார்.

    கடந்த 2013 முதல் 3 முறை குரூப் 1 தேர்வுகள் எழுதப்பெற்று முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிளாரன்ஸ் இவரும் அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இவருக்கு அறிவமுது (11) என்ற மகளும் அமுதப் பிரியன் ( 9) என்ற மகனும் உள்ளனர்.

    டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற இவரை சக ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். #tamilnews

    கோயம்பேடு பஸ்நிலையத்தில் கழிவறையில் மயங்கி விழுந்த கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் போலீஸ் டி.எஸ்.பி. உயிரிழந்தார்.
    சென்னை:

    கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் ஆனந்த பிரகாசம். இவரது குடும்பத்தினர் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார்கள்.

    பணி முடிந்து ஆனந்த பிரகாசம் சென்னை திரும்பி வருவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் அரசு பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்குள்ள பொது கழிவறைக்கு சென்றார். அங்கு திடீரென ஆனந்த பிரகாசம் மயங்கி விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்த பிரகாசத்தை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஆனந்த பிரகாசம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வாடிப்பட்டி பகுதியில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை குறைப்பது குறித்து போலீஸ் டிஎஸ்பி தலைமையில் ஆய்வு நடந்தது.
    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி பகுதியில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரம் தொடங்கி சமயநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட சாணாம்பட்டி பிரிவு, பழனியாண்டவர் கோவில் பிரிவு, விராலிப்பட்டி விலக்கு, வாடிப்பட்டி பிரிவு, ஆண்டிபட்டி சோழவந்தான் பிரிவு, தனிச்சியம்பிரிவு, நகரி, கட்டப்புளிநகர், துவரிமான் பிரிவு, புதுக்குளம்பிரிவு, சீனிவாசாநகர், மொட்ட மலை வரை 40 கி.மீ. தூரத்திற்கு விபத்தை குறைக்க மற்றும் அதனை தடுக்க தேவையான வழிமுறைகள் குறித்து சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் ஆய்வு நடந்தது.

    இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜமகேந்திரன், தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் அருண்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், ரெஜினா, முத்துபாண்டி, முத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயராம் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது பொதுமக்கள் சாலையை அதிகம் கடக்கும் இடங்களில் பேரிகாடு, வெள்ளைகோடுகள் வரைவது, இரவு நேரங்களில் மிளிரும் ஒளிவிளக்குகள் அமைப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அதற்கான இடத்தினை தேர்வு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×