search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Rain"

    • பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
    • மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

    மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்குதல் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெரும்பாலான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கனமழையால் 11 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    அண்மையில் பெய்த கனமழையால் உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், மழை மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளைத் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது.
    • வெள்ளம், மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி 23 பேர் பலியாகினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் நரோவால் மாவட்டத்தில் 5 பேரும், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உள்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் பலியாகினர்.

    மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வரும் 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
    • இதில் 441 குழந்தைகள் அடங்குவர். வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாகிஸ்தானில் பலத்த மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பருவமழை கொட்டி வருகிறது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 3.3 கோடி மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் 441 குழந்தைகள் அடங்குவர். வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தனிஷ், பெர்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் குடிநீர், மின் விநியோகம் இல்லாமல் சிரமப்பட்டனர்.
    • மழைக்கு ஒருவர் இறந்து விட்டார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சித்ரல் மற்றும் பெஷாவர் பகுதியில் மழை இடைவிடாமல் வெளுத்து வாங்கியது.

    இதனால் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பர் கோஷிஸ்தான் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின் நிலையத்தை வெள்ளம் அடித்து சென்றது.

    இது பற்றி அறிந்த மீட்பு படையினர் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    தனிஷ், பெர்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் குடிநீர், மின் விநியோகம் இல்லாமல் சிரமப்பட்டனர். இந்த மழைக்கு ஒருவர் இறந்து விட்டார்.

    ஈரான் நாட்டிலும் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தெற்கு ஈரான் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காரோகார் என்ற இடத்தில் 55 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர்.

    6 பேரை காணவில்லை. பல கிராமங்கள் வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த மழைக்கு இதுவரை 21 பேர் பலியாகி விட்டனர்.

    ×