search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAN"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    புதுடெல்லி:

    நமது நாட்டில் 'பான்' என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது.

    இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் 'பான்' எண்ணுடன் ஆதாரை இணைத்துவிட வேண்டும்.

    அப்படி இந்த மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத தனிப்பட்ட 'பான்' எண்கள் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது:-

    நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் 'பான்' எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 48 கோடி தனி நபர் 'பான்' எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன.

    விதிவிலக்கு பெற்ற பிரிவினர் உள்பட 13 கோடி பேர் இணைக்கவில்லை. விதிவிலக்கு பிரிவினர் தவிர்த்து அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் 31-ந் தேதி) இணைத்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். (அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலத்தில் வசிக்கிறவர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி வசிக்காதவர்கள்; இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் விதிவிலக்கு பிரிவினர் ஆவார்கள்).

    இணைக்காதவர்கள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும். இணைக்காதவர்கள் பல்வேறு வணிக நடவடிக்கைகளை, வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது பலன் பெற மாட்டார்கள்.

    பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    'பான்' எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன சிக்கல்கள் எழும் என்றால்-

    * 'பான்' எண் செயலற்றதாகி விடும்.

    * செயலிழந்த 'பான்' எண்ணைக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

    * வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை (ரீபண்ட்) திரும்பப்பெற முடியாது.

    * 'பான்' செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது.

    * 'பான்' எண் செயலற்றதாகி விட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் எந்தவொரு செயலை மேற்கொள்வதும் கடினமாகி விடும். ஏனென்றால் கே.ஒய்.சி என்று அழைக்கப்படுகிற வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களில் 'பான்' எண் முக்கிய இடம் வகிக்கிறது.

    நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி

    எம்பி-க்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். 542 எம்பி-க்கள் மற்றும் 4086 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் தங்களது பான் கார்டு தகவலை தெரிவித்திருக்கிறார்களா? என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்ததது.

    இந்த ஆய்வறிக்கையில் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு தகவலை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களே. காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் வெளியிடவில்லை.

    மாநில வாரியாக கேரளாவில் 33 எம்எல்ஏ-க்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்எல்ஏ-க்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    ஒடிசாவில் இரண்டு எம்பி-க்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்பி-க்களும் அசாம், மிசோரம், லட்சதீவு ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்பி-க்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்பி-க்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    ஆதார் திட்டத்தை மிக விரைவாக அமல்படுத்துவதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் இன்று சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆதார் அட்டை திட்டம். அதனடிப்படையில், இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கு 12 இலக்க எண் பொறித்த ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மக்களிடம் விரைவாக ஆதார் அட்டை திட்டத்தை கொண்டு சேர்த்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது.

    ஆதார் அட்டை திட்டத்தில், மக்களின் பத்து கைவிரல் ரேகைகள், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட தகவல்களை மிக விரைவாக  பதிவு செய்ததற்காக பஞ்சாப், பீகார் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களும், ஆதார் அட்டைகளை மிக விரைவாக தபால் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களும்  சிறப்பு விருதுகளை பெறவுள்ளது.
    வருமான வரி நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி மூலம் உடனடியாக பான் எண்ணைப் பெறும் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. #ITdept #instantAadhaarbasedPAN
    புதுடெல்லி:

    ’பான் எண்’ எனப்படும் வருமான வரி கணக்கு நிரந்தர எண் இல்லாதவர்கள் முகவர்கள் மூலமாகவோ, அலுவலகத்திலோ மனு செய்து காத்திருக்க வேண்டியுள்ளது.

    இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் உங்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி மூலமாக  உடனடியாக பான் எண்ணைப்  பெறும் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.

    உங்கள் கைபேசி மூலம் ஆன்லைன் வழியாக பதிவு செய்தால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவு சொல்லின் (ஒன் டைம் பாஸ்வேர்ட்) மூலம் சரிபார்ப்பு முடிந்து உங்களுக்கான வருமான வரி நிரந்தர கணக்கு எண் கைபேசி வழியாக வந்துசேரும்.

    முன்னதாக, உங்களது ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், வயது, பாலினம் மற்றும் முகவரி பான் கார்டிலும் இணைக்கப்படும். இந்த சலுகை தனிநபர் வருமான வரி கணக்கு தொடங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    அறக்கட்டளைகள், நிறுவனங்கள், மற்றும் இந்து கூட்டு குடும்பம் போன்ற இதர பிரிவினருக்கு இந்த சலுகை பொருந்தாது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கைபேசி மூலம் கிடைத்த வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் பான் கார்ட் எனப்படும் அடையாள அட்டை விரைவில் தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சலுகை முதலில் வருபவர்கள் - முதலில் பெறுபவர்கள் என்னும் அடிப்படையில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு.. https://www.incometaxindiaefiling.gov.in.

    #ITdept  #instantAadhaarbasedPAN
    ×