search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Corporation"

    • மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.
    • அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் உள்ள மழலை இல்லம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,

    மதுரையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கலாம். 

    மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.

    அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.

    சிறார் நீதிச்சட்டம், அவர்களின் பாதுகாப்பையும், உரிமையும் உறுதி செய்வதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்திற்கு சான்றுகளை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • பதில் மனு தாக்கல் குறித்து மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
    • அபராத தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தினர்.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க கோரி தொடர்ந்து பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் அல்லது உரிய இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

    இறுதிக்கட்ட விசாரணைக்காக இந்த ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா? அல்லது மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டதா? இல்லையா? அல்லது மனுதாரர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் முறையாக கையகப்படுத்தப்பட்டதா? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அவர்களுக்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட்டதா..? உள்ளிட்ட எந்த தகவலையும் தெரிவிக்காததால் இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை.

    மதுரை மாநகராட்சி கமிஷனரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும். வழக்கு குறித்து வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை கமி‌ஷனர் அனீஷ் சேகர் இன்று ஆய்வு மேற் கொண்டார்.

    மதுரை:

    மேலவாசல் பகுதியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எயந்திரத்தினையும், மேல வாசல் முதல் திடீர் நகர் வரையுள்ள மழைநீர் வடிகாலில் ரூ.6.05 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சிலாப்புக்கள் அமைக்கப்பட்ட பணியினையும், பேச்சியம்மன் படித்துறை கோவில் மற்றும் தளவாய் அக்ரஹாரம் பகுதியில் உள்ள மழைநீர் வாய்க்காலில் ரூ.3.45 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு மூடிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், கமி‌ஷனர் ஆய்வு செய்தார்.

    வடக்கு மாசி வீதியில் ரூ.28.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்து சாரதா நவீன ஸ்கேன் மையத்தினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் தெற்கு வெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட போது பள்ளியின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சுற்றுச்சுவர் அமைத்து தருமாறும், மாணவிகள் மிதிவண்டியினை நிறுத்துவதற்கு ஏதுவாக மேற்கூரை அமைத்து தருமாறும் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சுவர், பேவர் பிளாக் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதையும், ரெயில் நிலையத்தில் இருந்து டவுண்ஹால்ரோடு வழியாக திருமலை நாயக்கர் மகால் வரை ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய நடைபாதை பேவர் பிளாக் சாலை பணியினையும் ஆய்வு செய்தார்.

    டவுண் ஹால் ரோடு பகுதியில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கினை உடனடியாக சரி செய்யுமாறும், மழை நீர் வாய்க்காலில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணியினை விரைவில் முடிக்குமாறு உத்தர விட்டார்.

    ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம்குமார், செயற்பொறியாளர்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    மதுரை மாநகராட்சி சார்பில் கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்களை ஆணையாளர் அனீஷ் சேகர் இன்று அனுப்பி வைத்தார். #KeralaFloods #KeralaRain
    மதுரை:

    மதுரை மாநகராட்சி சார்பில் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களாக 4660 கிலோ அரிசி, 800 கிலோ பருப்பு, 175 கிலோ கோதுமை, 839 சோப்புகள், 5240 நாப்கின்ஸ், 1704 பெட்சீட்கள், 1027 நைட்டீஸ், 1191 கைலிகள், 290 வேட்டிகள், 1336 துண்டுகள், 7810 மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள், 25 சில்வர் தட்டுகள், 30 சில்வர் பானைகள், 1 சாக்கு பொரிகடலை, 2 சாக்கு உப்பு, 2 சாக்கு புளி, 15 பண்டல் தலைவலி மருந்துகள், 5 தலையனைகள், 25 ஸ்வெட்டர்கள், 50 பாக்கெட் மாஸ்க்குகள், 4262 பாக்கெட் பிஸ்கட்ஸ் மற்றும் ரஸ்க் பொருட்கள், 3 பண்டல் மருந்து பொருட்கள் என 43 வகையான சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 2 லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் மதுரை மாநகராட்சியில் இருந்து 400 மூடைகள் கொண்ட 10 டன் பிளீச்சிங் பவுடர் 2 டிப்பர் லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் மணி வண்ணன், நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி, நாராயணன், பிரேம்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்) ரங்கராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #KeralaFloods #KeralaRain
    ×