search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lighthouse"

    • தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
    • இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.

    மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.

    இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது.
    • இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் கலங்கரை விளக்கங்களை பராமரித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான சட்டம்

    1927-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி கொண்டு வரப்பட்டது.

    "கலங்கரை விளக்கச் சட்டம்" என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் கலங்கரை விளக்க சட்ட தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கலங்கரை விளக்கங்களும் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னும்.

    புதுவையில் 2 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. பழைய கலங்கரை விளக்கம் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

    புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் தற்போது மின்னொளியில் ஜொலிக்கிறது.

    இன்று முதல் 3 நாட்களுக்கு கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை பார்வையிட நபர் ஒருவருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மணப்பாடு கலங்கரை விளக்கை மாணவர்கள் பார்வையிட 17-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு 15-ந்தேதி ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளதாக முதன்மை அதிகாரி மதனகோபால் குறிப்பிட்டுள்ளார்.

    உடன்குடி:

    75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வருகிற 17-ந்தேதி வரை மாணவர்கள் மணப்பாடு கலங்கரை விளக்கை பார்வையிடலாம் என்றும், நாளை (15-ந்தேதி) மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க முதன்மை அதிகாரி மதனகோபால் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து உடன்குடி, திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலங்கரை விளக்கை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலங்கரை விளக்கை பார்க்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

    ×