என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lighthouse"
- புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது.
- இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கலங்கரை விளக்கங்களை பராமரித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான சட்டம்
1927-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி கொண்டு வரப்பட்டது.
"கலங்கரை விளக்கச் சட்டம்" என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் கலங்கரை விளக்க சட்ட தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கலங்கரை விளக்கங்களும் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னும்.
புதுவையில் 2 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. பழைய கலங்கரை விளக்கம் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.
புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் தற்போது மின்னொளியில் ஜொலிக்கிறது.
இன்று முதல் 3 நாட்களுக்கு கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை பார்வையிட நபர் ஒருவருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மணப்பாடு கலங்கரை விளக்கை மாணவர்கள் பார்வையிட 17-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு 15-ந்தேதி ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளதாக முதன்மை அதிகாரி மதனகோபால் குறிப்பிட்டுள்ளார்.
உடன்குடி:
75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வருகிற 17-ந்தேதி வரை மாணவர்கள் மணப்பாடு கலங்கரை விளக்கை பார்வையிடலாம் என்றும், நாளை (15-ந்தேதி) மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க முதன்மை அதிகாரி மதனகோபால் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து உடன்குடி, திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலங்கரை விளக்கை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலங்கரை விளக்கை பார்க்க அனுமதி வழங்கபட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்