மணப்பாடு கலங்கரை விளக்கை பார்க்க நாளை பொதுமக்களுக்கு அனுமதி

மணப்பாடு கலங்கரை விளக்கை மாணவர்கள் பார்வையிட 17-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு 15-ந்தேதி ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளதாக முதன்மை அதிகாரி மதனகோபால் குறிப்பிட்டுள்ளார்.
மணப்பாடு கலங்கரை விளக்கை பார்வையிடும் மாணவர்கள்.
மணப்பாடு கலங்கரை விளக்கை பார்வையிடும் மாணவர்கள்.
Published on

உடன்குடி:

75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வருகிற 17-ந்தேதி வரை மாணவர்கள் மணப்பாடு கலங்கரை விளக்கை பார்வையிடலாம் என்றும், நாளை (15-ந்தேதி) மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க முதன்மை அதிகாரி மதனகோபால் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து உடன்குடி, திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலங்கரை விளக்கை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலங்கரை விளக்கை பார்க்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com