search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indonesia earthquake"

    • ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சுனாமி ஆபத்து இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்ப வெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது. நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது. ஆனால் மக்களிடம் சுனாமி பீதி ஏற்பட்டது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை, இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது. இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள். இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 19-வது நினைவு தினம் முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
    • சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நுசா தெங்கரா மாகாண தலைநகரான குபாங்வுக்கு வட-வடகிழக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. 36 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.

    நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

    முதல் நிலநடுக்கம் 43 கி.மீ. ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 40.கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவிலும் உணரப்பட்டது.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் சிராஞ்சங்-ஹிலிருக்கு வடமேற்கே 14 கி.மீ தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவானது. 123.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவிலும் உணரப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதே மாகாணத்தில் சியாஞ்ச்சூர் நகரில் கடந்த மாதம் 21-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 374 பேர் பலியானார்கள். 600 பேர் காயம் அடைந்தனர். ஏற்கனவே இந்தோனேசியாவின் செமேரு எரிமலை வெடித்து சிதறிய நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • இந்தோனேசியா நில அதிர்வு ஏற்படும் பகுதியில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு பகுதியில் மேற்கு கடற்கரையில் உள்ள மெண்டவாய் தீவுகளுக்கு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகளில் 6.4 ஆக பதிவானதாக அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் இருந்தது. எனவே சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    கடந்த திங்கட்கிழமை இதே இடத்தின் அருகே 5.2 ரிக்டர் அளவுகளில் 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா நில அதிர்வு ஏற்படும் பகுதியில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 1000 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுனாமியின் போது அவர்கள் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. #Indonesiaearthquake
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் பலு நகரில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. அதில் பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

    1,571 பேர் பலியானதாக இந்தோனேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 1000 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் 1000 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுனாமியின் போது அவர்கள் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    சுனாமி தாக்குதலில் பலு நகரம் அழிந்த நிலையில் உள்ளது. பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமாகிவிட்டன. பெரும்பாலான ரோடுகள் சுனாமியில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அந்த நகரை சீரமைக்க 6 மாதம் முதல் ஒருவருடம் வரை ஆகலாம் என இந்தோனேசிய துணை அதிபர் ஜுசுப்கல்லா தெரிவித்தார். அதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #Indonesiaearthquake
    இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் கக்கத் தொடங்கியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #IndonesiaVolcanoErupts
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த 29-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டி டங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழப்பு 1400ஐ எட்டியுள்ளது.

    இந்த சுனாமியின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சுலவேசி தீவில் உள்ள ஒரு எரிமலை (மவுண்ட் சோபூடன்) இன்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது. எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் உள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது. இந்த சாம்பல் விமான என்ஜின்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்  அப்பகுதியில் விமானங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

    பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இங்கு சிறியதும் பெரியதுமான 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. #IndonesiaVolcanoErupts #IndonesianIsland
    இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiaquaketsunami #Indonesiaquake
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் கடந்த 29-ந்தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சாப்பிட உணவும், குடிக்க தண்ணீர் இன்றியும் மக்கள் தவிக்கின்றனர். எனவே வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை உடைத்து உணவு பொருட்களை மக்கள் கொள்ளையடித்து வருகின்றனர். கம்ப்யூட்டர்கள், பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் சூறையாடப்படுகின்றன.

    அதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் வழங்கப்படுகிறது. அவை போதுமான அளவு இல்லாததால் வணிக வளாகங்களை பொதுமக்கள் கொள்ளை அடிக்கின்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

    சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 34 மாணவர்கள் பிணங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 86 மாணவர்களை காணவில்லை. 52 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

    இடிந்து கிடக்கும் 4 மாடி ஓட்டலின் இடிபாடுகளுக்குள் 50 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மீட்பு குழுவினர் 3 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    உயிருடன் சிக்கி தவிப்பவர்களை மீட்பதில் தீவிர முனைப்பு காட்டப்படுகிறது. வெல்டிங் மற்றும் எந்திரம் மூலம் கம்பிகளும், இடிபாடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மீட்பு பணிக்கு கூடுதல் போலீஸ் அதிகாரிகளை அதிபர் ஜோகோ விட்டோபோ அனுப்பி வருகிறார். புதைந்து கிடக்கும் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கி தவிப்பவர்களை மீட்பதில் முன்னுரிமை அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.


    நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் கடுமையான தாக்குதலால் பலு நகரில் உள்ள பெரிய பாலம் இடிந்தது. ஆஸ்பத்திரிகள் சேதம் அடைந்தன. இதனால் காயம் அடைந்த மக்களுக்கு திறந்த வெளியில் வைத்தும், ராணுவ முகாம்களில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால் சுமார் 5 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ராணுவ விமானம் மூலம் பலுவில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பல அடுக்கு மாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

    அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டு மீட்பு பணி நிறைவுறும் போது பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என துணை அதிபர் ஜுசுப் கல்லா அச்சம் தெரிவித்துள்ளார். #Indonesiaquaketsunami  #Indonesiaquake
    இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiaquaketsunami #deathtoll1234
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் கடந்த 27-ம் தேதி 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
     
    இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. இந்த திடீர் சுனாமியை எவ்வித எச்சரிக்கை கருவிகளாலும் மதிப்பிட முடியாமல் போனதாக கூறப்படுகிறது.


    சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  #Indonesiaquaketsunami #deathtoll1234
    இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. #Indonesiaquake #Indonesiaquaketsunami
    ஐதராபாத்:

    இந்தோனேசியாவில் கடந்த 28-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி உருவாகி அங்குள்ள பேலு நகரையும் அதை சுற்றி உள்ள பகுதிகளையும் தாக்கியது.

    இதில் 800 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடலில் சுனாமி ஏற்பட்டால் அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல நாடுகள் சேர்ந்து கடலில் பல்வேறு கருவிகளை பொருத்தி உள்ளன.

    ஆனால் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுனாமி தாக்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கருவிகளிலும் அது பதிவாகவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு திடீரென சுனாமி ஏற்பட்டு தாக்கியது. இதனால் பெரிய அளவில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.

    சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.


    சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே கண்டுபிடிக்க இந்தியாவும் கருவிகளை பொருத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் தேசிய மையம் இதை கண்காணித்து வருகிறது. அவர்களுக்கும் சுனாமி வருவது பற்றி கருவிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

    இது சம்பந்தமாக அந்த மையத்தின் டைரக்டர் ஷெனாய் கூறியதாவது:-

    நிலநடுக்கம் ஏற்பட்டதுமே கருவிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே இந்தோனேசியா உள்ள சர்வதேச தொடர்புகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நாம் கடலில் பொருத்தி உள்ள மிதவைகள், கண்காணிப்பு கருவிகளில் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 3 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தோம். அப்போதும் அறிகுறி தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அறிகுறி தெரியாததால் வாபஸ் பெறப்பட்டது.

    இவ்வாறு ஷெனாய் கூறினார்.

    கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ் கூறியதாவது:-

    சுனாமியை கண்டுபிடிக்கும் கருவியில் எந்தவித அறிகுறியும் பதிவாகவில்லை. இது ஒரு ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கிறது. 2 காரணங்களால் இது கருவியில் பதிவாகாமல் இருந்து இருக்கலாம். நிலநடுக்கம் ஏற்பட்டதும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் மூலம் சுனாமி கீழ் இருந்து உருவாகி இருக்கலாம். அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதும் சிறிய அளவில் சுனாமி உருவாகி பூகோள ரீதியாக அது பெரிதாக மாறி இருக்கலாம். எனவே தான் முன்கூட்டியே கருவிகளில் அளவீடு காட்டவில்லை. இது ஒரு அதிசயமான வி‌ஷயமாகத்தான் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Indonesiaquake  #Indonesiaquaketsunami
    இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலுக்குள்ளான சுலாவெசி மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. #indonesiatsunami
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தில் கடந்த 27-ந்தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பலு என்ற கடற்கரை நகரத்தை சுனாமி பேரலைகள் தாக்கி துவம்சம் செய்தன.

    பலு நகரில் நடைபெற்ற கடற்கரை திருவிழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிக்கி உயிரிழந்தனர். கடற்கரையில் கூடியிருந்தவர்களை ஆழிப் பேரலைகள் சுருட்டியதால் அதில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறி கிடந்தன.

    மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சுனாமி தாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தில் பலு நகரில் 2 ஓட்டல்கள், ஒரு வர்த்தக நிறுவனம் (மால்) இடிந்து தரை மட்டமானது.

    அதில் ஒரு ஓட்டலில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு மேலும் 50 பேர் உயிருடன் சிக்கி தவிப்பது தெரியவந்தது அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இடிந்து கிடக்கும் வர்த்தக நிறுவனத்தின் உள்ளே சிக்கியிருப்பவர்களின் உறவினர்கள் வெளியே கண்ணீருடன் காத்து கிடக்கின்றனர்.


    சுனாமி தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து பிணங்கள் மீட்கப்பட்டு வருவதால் சுலாவெசி மாகாணத்தில் மட்டும் சாவு எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது. இன்னும் நிலநடுக்கம் தாக்கிய சில பகுதிகளிலும் மீட்பு பணி நடைபெற வேண்டியுள்ளது. இங்கு 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என துணை அதிபர் ஜுசுப் கல்லா தெரிவித்தார்.

    இதற்கிடையே சுனாமி தாக்குதலில் சின்னா பின்னமான பலு நகருக்கு அதிபர் ஜோகோ விடோடோ நேற்று நேரில் சென்றார். அங்கு இடிந்து தரைமட்டமான அடுக்கு மாடியிருப்புக்கு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் துயரங்களை நான் அறிவேன். தகவல் தொடர்பு உள்பட அனைத்தும் மிக குறுகிய காலத்தில் சரி செய்யப்படும் என்றார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாங்கள் பசியால் வாடுகிறோம். எங்களுக்கு உணவு தாருங்கள். ராணுவ வீரர்கள் ரேசன் முறையில் குறிப்பிட்ட அளவு உணவே வழங்கினார்கள் என தெரிவித்தார். பலர் மாயமாகிவிட்டதாகவும் கூறினர்.

    சுனாமி தாக்குதலில் பலு நகரமே முற்றிலும் அழிந்த நிலையில் உள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் உணவு பொருட்கள் எடுத்து வர முடியாத நிலை உள்ளதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே பசியை போக்க மார்க்கெட்டுகளில் புகுந்த பொதுமக்கள் கடைகளை உடைத்து உணவு பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர். சூப்பர் மார்கெட்டுகளில் நுழையும் ஆண்களும், பெண்களும் பிளாஸ்டிக் கூடைகளில் தங்களுக்கு தேவையான பிஸ்கெட்டுகள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குடிநீர் பாட்டில்களும் கொள்ளைக்கு தப்பவில்லை.

    பிணங்கள் குவியல் குவியலாக கிடப்பதால் அவை அழுகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிணங்கள் நேற்று ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

    இதற்கிடையே பேரிடர் மீட்பு பணிக்கு ரூ.275 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிதி மந்திரி ஸ்ரீமுல்யான் இந்திராவதி தெரிவித்தார். #indonesiatsunami
    இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியை நேற்று தாக்கிய நிலநடுக்கம், சுனாமி பேரலைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiaquaketsunami #deathtoll384
    ஜக்ர்தா:

    இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
     
    இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.


    இந்நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Indonesiaquaketsunami #deathtoll384
    ×