search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Help"

    அரியலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா 3440 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடி நலத்திட்ட உதவி

    அரியலூர்,  

    அரியலூர்,மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட திட்ட அலுவலர், இலக்குவன் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் அரியலூர்சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி கலை வாணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித்தா, ஆர்.டி.ஓ. அரியலூர் இராம கிருஷ்ணன், உடையார் பாளையம் பரிமளம் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு 14 துறை சார்பில் 3440 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்,

    நிகழ்ச்சி முடிவில் கூட்டுறவு சரக இணை பதிவாளர் தீபாசங்கரி நன்றி கூறினார்.

    • அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 437 மனுக்கள் பெறப்பட்டன.

    மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருவருக்கு காது கருவி, 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் ஆகியவற்றை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அதனைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் கோரோட் அறக்கட்டளை மூலம் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் உளவியல் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்றுள்ள 19 திருநங்கையருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பவானி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1033 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம்

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்கள் குறித்தும், என்னென்ன காரணங்களால் அந்த விபத்துகள் நடைபெற்றது. மீண்டும் அந்த இடங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்து ஏற்படும் நேரங்களில் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து போதிய உதவிகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, வாகனங்கள் பழுதாகி நின்றாலோ, எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவசர உதவி ஏற்பட்டாலும் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைக்கலாம்.

    24 மணிநேரமும் அவசரகால ஊர்தி தயார் நிலையில் இருக்கும் . 1033 என்ற எண் குறித்து வாகன ஓட்டிகளுக்கோ, பொதுமக்களுக்கோ போதிய விழிப்புணர்வு இல்லை. ஆகையால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரத்தில் உதவ இப்படி ஒரு வசதி உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசுங்கள். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் தெரியாத காரணத்தால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை படம்பிடித்து காவல்துறைக்கு அனுப்பும் நவீன தொழில்நுட்பத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்த தேவையான திட்ட அறிக்கையினை தயார் செய்து வழங்கிட வேண்டும்.

    அவ்வாறு அனுப்பப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு டிரைவரன் உரிமத்தை ரத்துசெய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மஞ்சுளா, ஆர்.டி.ஓ. (பொ) சத்திய பாலகங்காதரன், டிஎஸ்பி பழனிசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) பிரபாகரன், வாகன ஆய்வாளர் ராஜாமணி மற்றும் தாசில்தார்கள், காவல்துறையினர், போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    தமிழக முதலமைச்சர் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருவரங்குளத்தில் 2 ஊராட்சி அமைப்பு அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி மதிப்பிலான காசோலையும், மேலும் 40 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான கடன் உதவி தொகையும் மொத்தம் ரூ.3.20 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் பெண்கள் முன்னேறும் வகையில் சிறப்பான திட்டங்களை வரையறுத்து அதனை நிறைவேற்றி வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருப்பதால் இத்திட்டங்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. நல்ல ஆட்சிக்கு அறிகுறியாக முதல்-அமைச்சர் மாதம் தோறும் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களுக்கு துணையாக இருந்து வருகிறார் என்றார்.

    நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, உதவி திட்ட அலுவலர்கள் தில்லைமணி, சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுல கிருஷ்ணன், ஆயிஷா ராணி, ஒன்றிய செயலாளர் வடிவேல், சுற்றுச்சூழல் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் வீரசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நலத்திட்ட உதவிகளை மாணவர்கள் முறையாக பெற்று முன்னேற்றமடைய வேண்டும்அமைச்சர் மெய்யநாதன் அறிவுரை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன்தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய பொதுமக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கத்தக்குறிச்சி ,வாண்டாக்கோட்டை மற்றும் வல்லத்திராக்கோட்டை பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதிகளில் உள்ள குறைந்த மின்அழுத்தம் சரிசெய்யப்பட்டு வீட்டு மின்சாரம் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் வல்லத்திராக்கோட்டையில் திரௌபதியம்மன் கோவில் முன் மண்டபம் மராமத்து பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை த்தொடர்ந்து வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கும் 86 மாணவிகளுக்கும் மற்றும் வேங்கிடகுளம் தூய வளனார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 78 மாணவர்களுக்கும் 71 மாணவிகளுக்கும் என மொத்தம் 300 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளித்திவிடுதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பணிகள் அடிக்கல்நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    இதன்மூலம் இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைவதுடன் வளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் சேந்தன்குடி பகுதியில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதி கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடை களுக்கான மருத்துவ வசதியினை வீடுகளுக்கு அருகாமையிலேயே பெற்றுக்கொள்ள முடியும். மேலும் கால்நடைகளுக்கான மருத்துவ சேவையினை பெற்று நோயில்லாமல் கால்நடைகளை வளர்த்து பயன்பெறலாம். எனவே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, தலைமையாசிரியர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் இலவச காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது
    • முதலமைச்சரின் மருத்துவ திட்டத்தின் கீழ் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா வழங்கினார்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக காது கேட்கும் கருவியை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா முன்னிலையில், தலைமை மருத்துவர் சாரதா வழங்கினார்.

    மேலும் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவி மாதம் ஒரு முறை வழங்கப்படுகிறது என்றும், காது கேட்கும் கருவி தேவைப்படும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து இலவசமாக காது கேட்கும் கருவி பெற்று பயன்பெறுமாறு தலைமை மருத்துவர் சாரதா கேட்டுக் கொண்டார்

    • புதுக்கோட்டையில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
    • மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    அப்துல் காதர் பயிற்சிகள் அளித்து வருகிறார். இங்கு பயிற்சி பெறும் குத்துச்ச ண்டை வீரர்கள் மாவட்ட மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளனர்.மேலும் குத்துச்சண்டை பயிற்சி பெறுபவர்களுக்கு கையுறை மற்றும் தலைக்க வசம் ரூ. 3000, 4000 விலை உள்ளதால் வீரர்கள் வா ங்குவதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில்,இவர்களுக்கு உதவி செய்வதற்காக புதுக்கோ ட்டை ரோட்டரி சங்க தலை வர் ராஜா முஹம்மது ஏற்பா ட்டில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குத்து ச்சண்டை வீராங்க னைக ளுக்கு கையுறை மற்றும் தலைக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் புது க்கோட்டை குத்துச்சண்டை கழக தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி துணை ஆளுநர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் வேலு கார்த்திக் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது பொருளாளர் அருண் செயலாளர் ராம்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கி சிறப்பித்தனர்.குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு உதவி செய்த சங்க நிர்வாகிகளுக்கு குத்துச்சண்டை வீராங்க னைகள் மிகுந்த மகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்தனர்.

    • அரியலூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விவரங்களை அறிய உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது

    அரியலூர்,

    மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி முதல் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறியவும், அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதன்படி, அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) குமரையா - 9626725241, 04329228151, அரியலூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோவிந்தராசு - 9843869337, 04329222058, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் உமாசங்கரி -7598720601, 04331245352, அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் (பொறுப்பு) பசுமதி - 9786326209, 04329222062.ஜெயங்கொண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் அண்ணாதுரை- 9095689998, 04331-250220, செந்துறை தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வக்குமார் - 9025277223, 04329242320, ஆண்டிமடம் தலைமையிடத்து துணை தாசில்தார் பார்த்திபராஜன் - 9841304410, 04331299800 ஆகியோரை தொடர்பு கொண்டு பயனாளிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையங்கள் வருகிற 30-ந் தேதி வரை செயல்படும். விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.விடம் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம்.மேலும், இந்த திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு வருகின்ற குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஓ.டி.பி. எண்கள் மற்றும் இதர விவரங்களை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். இதுபோன்ற விவரங்கள் கேட்கப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது
    • பிரதமர் நிதியில் இருந்து தள்ளுவண்டிகள் நகராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பி.எம்.ஸ்வா நிதியில் தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் 10 பேருக்கும், பூக்கடை வியாபாரிகள் 3 பேருக்கும், டிபன் கடை வியாபாரிகள் 2 பேருக்கும் தள்ளுவண்டிகளை வழங்கினார். இதில் நகர்மன்ற கவுன்சிலர்கள், நகரமைப்பு ஆய்வாளர் மாணிக்க செல்வன், இளநிலை உதவியாளர் பார்த்திபன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் இந்தியன் ஸ்வச்லீக்-2023 2.0 திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி சார்பில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிடும் வகையில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல் குறித்தும், கழிவுநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி நலத்திட்ட உதவிகள்
    • கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவ ட்டம் எஸ்.குளவாய்ப ட்டி யில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வே று அரசு நலத்திட்ட உதவி களை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கி னார்.

    பின்னர் அவர் கூறும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாத ந்தோறும் ஒரு குக்கி ராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியு ள்ளார்கள்.

    அதன்படி தமிழக அரசி ன் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்ட ங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் அனை வரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.

    அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களின்கீழ் பயன்பெறு வதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பய ன்பெறலாம்.

    இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்க ளால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக்ஷ ஆட்சியரகத்தில் கண்கா ணிப்பு அலுவலர் நியமிக்க ப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகி றது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின்

    திட்டங்களை அறிந்து கொள்வ துடன், அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டா ட்சியர் (பொ) க.ஸ்ரீதர், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, திருவ ரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் விஸ்வநாதன்இ உள்பட பலர் கலந்து ெ காண்டனர்.

    • டாக்டர் சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • எடப்பாடி பழனிச்சாமி-முன்னாள் அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார்.

    மதுரை

    மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான டாக்டர் சரவணன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை யில் உள்ள முக்கிய கோவில்களில் டாக்டர் சரவணன் பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை டாக்டர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை சந்தித்து டாக்டர் சரவணன் வாழ்த்து பெற்றார்.

    மேலும் முன்னாள்

    எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செய லாளர் வெற்றிவேல், மாந கராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா ஆகியோர் டாக்டர் சரவணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்தநாளை முன்னிட்டு சதீஷ் ஏற்பாட்டில் தொழிலதிபர் ரகுநந்தன் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

    மத்திய 3-ம் பகுதி செயலாளர் மாணிக்கம், விளாங்குடி பகுதி செய லாளர் ஜித்தன், வாடிப் பட்டி ஒன்றிய பொறுப் பாளர் ஆவியூர் ராதா கிருஷ்ணன், வடக்கு 2-ம் பகுதி செயலாளர் கணே சன், பழங்காநத்தம் பகுதி செயலாளர் பிரிட்டோ, அம்மன் குரூப்ஸ் உரிமை யாளர் லட்சுமணன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்திக், தமிழக முன்னேற்ற கழகம் நிறு வனர் ராஜ்குமார், மருது தேசிய கழகம் சார்பில் மருதுபாண்டி, அகமுடை யார் கல்வி மைய நிர்வாகி கள் ஆகியோர் டாக்டர் சரவணன் சந்தித்து பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த னர்.

    டாக்டர் சரவணனின் சூர்யா அறக்கட்டளை மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மாற்று கால்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் ஏராள மானோருக்கு இலவச இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில், மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இதில் மூத்த மகன் ஸ்ரீதர் (வயது 34). இவர் புதுச்சேரி-கடலூர் சாலையில் பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத்திற்கான துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இதையொட்டி அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். ஸ்ரீதர் தனக்கு விடுமுறை கிடைக்கும்போது புதுச்சேரியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று, தனது மனைவி மற்றும் பெற்றோரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்த பின்னர், இரவில் திண்டுக்கல் செல்வதற்காக ஸ்ரீதர் தனது காரில் புறப்பட்டார். இரவு 10 மணியளவில் அவரது கார் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று, மாவட்ட அரசு கண் மருத்துவமனை அருகே வந்தது. அப்போது ஸ்ரீதரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி ஸ்ரீதரின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×