அரசு மருத்துவமனையில்இலவச காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் இலவச காது கேட்கும் கருவி வழங்கப்பட்டதுமுதலமைச்சரின் மருத்துவ திட்டத்தின் கீழ் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா வழங்கினார்
அரசு மருத்துவமனையில்இலவச காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது
Published on

கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக காது கேட்கும் கருவியை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் அனுஜா முன்னிலையில், தலைமை மருத்துவர் சாரதா வழங்கினார்.

மேலும் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவி மாதம் ஒரு முறை வழங்கப்படுகிறது என்றும், காது கேட்கும் கருவி தேவைப்படும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் கார்டு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து இலவசமாக காது கேட்கும் கருவி பெற்று பயன்பெறுமாறு தலைமை மருத்துவர் சாரதா கேட்டுக் கொண்டார்

X

Maalai Malar
www.maalaimalar.com