search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guruship"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.
    • லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார்.

    வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார்.

    லக்னத்தில் வியாழன் இருக்கப் பெற்ற ஜாதகர் பயம் இல்லாதவராகவும், முன்னேறும் திறமை உள்ளவராகவும் விளங்குவார்.

    லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார். செல்வத்தை வழங்குவார்.

    2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள்.

    2-ல் குரு வாழ்க்கையில் நல்ல உணவு மற்றும் வசதிகள் எல்லாம் ஜாதகருக்கு உண்டாகச் செய்வார்.

    2-ல் உள்ள குரு சில நேரங்களில் சிலருக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மையை வழங்குவார்.

    குரு தனுசிலோ மீனத்திலோ இருக்கப்பெற்று அது, 2-ஆம் இடமாக அமையுமானால், ஜாதகர் வியாபாரத்தில் விற்பன்னராவார்.

    தனுசு, மீனம் தவிர வேறு இடங்கள் 2-ஆம் இடமாகி, அங்கே குரு இருக்கப் பெற்றவர்கள், குடும்ப வாழ்வில் சில தொல்லைகளை அனுபவிக்க நேரும்.

    3-ஆம் இடத்தில் உள்ள ஜாதகருக்கு உலோப குணத்தை வழங்குவார். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஏற்படும்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகரை பெண்களிடம் பிரியம் உள்ளவராக உருவாக்கி வைப்பார்.

    3-ஆம் இடத்தில் உள்ள வியாழன் ஜாதகரை ஒரு நூலாசிரியராக ஆக்கி வைப்பார்.

    3-ல் உள்ள குருவால் ஜாதகர் சகோதரரால் நலம் பெறவும் சகோதரருக்கு நலம் புரியவும் சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

    3-ல் உள்ள வியாழன் ஜாதகரை உயர்ந்த நிலைக்கு உரியவராகச் செய்வதற்கு இடமிராது.

    3-ல் உள்ள வியாழ னால் ஜாதகருக்கு ஜீரண சக்தி திருப்திகரமாக அமையாது.

    4-ல் உள்ள குரு சுகமான வாழ்க்கையைத் தருவார்.

    மக்கள் நலம், தாய் நலம், நண்பர்கள் நலம், பணியாட்கள் நலம், குடும்ப நலம் இவைகள் எல்லாம் ஜாதகருக்கு 4-ஆம் இடத்தில் உள்ள குருவால் உண்டாகும்.

    விவசாயத்தின் மூலம் தானியங்களைச் சேர்த்து பொருள் திரட்டக்கூடிய வாய்ப்பு 4-ஆம் இடத்து வியாழன் ஜாதகருக்கு உண்டாக்குவார்.

    4-ல் உள்ள குரு ஜாதகரை உன்னதமானவராக உருவாக்குவார். ஆனால், பகைவர்களால் தொல்லைகளை விளைவிப்பார்.

    4-ல் உள்ள குரு பலம் பெற்றிருக்கும் போது ஜாதகருக்கு மதிப்பும், செல்வமும் உயரும்.

    4-ல் உள்ள குரு புத்திர பாக்கியம் தாமதமாக உண்டாகச் செய்வார்.

    வியாழன் 5-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். வாழ்க்கையில் உயர்ந்த பதவி அமையும்.

    5-ஆம் இடத்தில் உள்ள குரு புத்திகாரனாக இருப்பதனால் புத்திரப் பாக்கியக் குறைவு ஏற்படும்.

    5-ல் உள்ள குரு சுபக்கிரகங்களோடு சேராமல் பாபக்கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தால் புத்திர பாவத்தைப் ெபாருத்த வகையில் சங்கடம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு பலமுள்ளவராகி, சுபக்கிரக சேர்க்கை பெற்றிருந்தால், மக்கள் பாக்கியம் உண்டாகும்.

    5-ல் உள்ள குரு, பொதுவாக வயிற்றுத் தொல்லையைத் தரக்கூடும்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு, பகைவரை வெற்றி கொள்ளக்கூடிய பராக்கிரமத்தை உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள குரு உடல் பலமோ, சக்தியோ ஜாதகருக்கு முழுமையாக உண்டாகாதவாறு செய்வார். அஜீரணக் கோளாறு ஏற்படவும் செய்வார்.

    6-ல் உள்ள குரு மனைவியின் மூலமாக சிறப்பு உண்டு பண்ணுவார்.

    6-ஆம் இடத்தில் உள்ள வியாழன் வக்ர கதியை அடைந்திருந்தால், ஜாதகருக்கு பகைவர்களால் தொல்லை ஏற்படலாம்.

    7-ல் உள்ள குரு ஜாதகரை, அவரது தந்தையைக் காட்டிலும் சிறப்பான நிலையில் உயர்த்தி வைப்பார்.

    7-ல் உள்ள வியாழன் காரணமாக ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவாள்.

    ஜாதகர் பெரிய செல்வந்தர் ஆவதற்கு 7-ஆம் வீட்டு வியாழனால் வாய்ப்பு உண்டாகும். மேலும் ஜாதகர் அவரது தந்தையைக்

    காட்டிலும் பெருந்தன்மை மிகுந்த–வராக விளங்கச் சந்தர்ப்பம் உண்டு.

    7-ல் உள்ள குரு, ஜாதகரை மதியூகம் மிக்கவராகவும், முக்கியமான பதவியை வகிக்கச் செய்கிறவராகவும் ஆக்குவார்.

    7-ஆம் இடத்து குருவின் காரண–மாக அந்த ஜாதகர் பெரிய கவிஞனாக முடியும். புகழ் பெறவும் முடியும்.

    8-ல் உள்ள குரு, ஜாதக–ருக்கு உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சம்பாத்தியத்தை உண்டு பண்ணுவார்.

    புனித தலங்களுக்கு சென்று இறைவனை வழிப்படக்கூடிய வாய்ப்பு உண்டு பண்ணக்கூடியவர், 8-ஆம் இடத்து வியாழனாவார். ஜோதிடம், குறி சொல்லுதல் ஆகியவற்றில் ஜாதகருக்கு நிபுணத்துவம் உண்டாகும்.

    8-ம் இடத்து வியாழன் காரணமாக ஜாதகருக்கு பொருளாதார நிலையில் முழுமையான சுபிட்சம் இராது. ஆனால், ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.

    8-ல் உள்ள குரு நண்பர்களால் ஜாதகருக்கு பொருள் இழப்பு உண்டு பண்ணுவார். வியாதியினால் அல்லல் படவும் நேரும்.

    9-ல் உள்ள வியாழன் ஜாதகரை புனித கருமங்கள் செய்ய வைப்பார். உயர்ந்த பதவியை உண்டாக்கித் தருவார்.

    9-ஆம் இடத்தில் உள்ள வியாழன் மிக்க பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் மந்திரியாகவோ, கட்சித் தலைவராகவோ, பிரகாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    9-ல் உள்ள குரு ஜாதகருக்கு தெய்வ பக்தியையும், வேத விற்பன்னர்களைப் போற்றுகின்ற பண்பையும் வழங்குவார்.

    10-ல் உள்ள வியாழன் ஒருவரை குபேரனாக்குவார். அரசாங்க மதிப்பையும் வருமானத்தையும் பெற வைப்பார்.

    10-ல் உள்ள குரு, நேர்வழியில் நடக்கக்கூடிய தன்மையை ஜாதகருக்கு வழங்குவார். இந்த ஜாதகர் பெற்றோரை போற்றி நடப்பவர் ஆவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன், ஜாதகருக்கு பல துறைகளிலும் செல்வத்தைத் திரட்டித் தருவார்.

    11-ம் இடத்தில் உள்ள வியாழன் குறைந்த அளவில் மக்கட்செல்வத்தை வழங்குவார்.

    11-ம் இடத்தில் உள்ள குரு தனித்திருந்தால் பண வருவாயை சுருக்கி விடுவார்.

    12-ல் உள்ள வியாழன் பாச பந்தங்களில் இருந்து ஜாதகரை ஒதுக்கி வைப்பார். பொதுமக்களின் விரோதம் ஜாதகருக்கு ஏற்படும்.

    12-ல் உள்ள குருவினால் ஜாதகருக்குப் பேச்சு வன்மை குறைந்து விடும். ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்படும். அடிமைப் பணி செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

    12-ம் இடத்தில் உள்ள குரு ஜாதகருக்கு அடிக்கடி பயணங்களை உண்டு பண்ணுவார்.

    12-ம் இடம் மீனமாகவோ, தனுசாகவோ ஆகுமானால் ஜாதகர் பக்திமானாகவும், தர்மவானாகவும் விளங்கவும் செல்வத்தைக் குவிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

    • பரிகார மகா யாக பூஜை நடந்தது.
    • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    இந்த சன்னதியில் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வாரும் காட்சி தருகிறார்.

    இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா கடந்த 29-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

    நேற்று பகல் 2 மணி அளவில் பரிகார மகா யாக பூஜை நடந்தது. 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடத்தினர். பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து அர்ச்சகர்கள் புனித தீர்த்தக்குடங்களை எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

    அதன்பிறகு நேற்று மாலை 5.21 மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆனதையொட்டி குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

     அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். பரிகார ராசிதாரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

    பிரளயநாதசுவாமி

    சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகார யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி நடக்கிறது.

    ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார். குரு பகவானின் பார்வை பட்டால் செல்வ ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இதன் காரணமாகவே, குரு பெயர்ச்சி அன்று மக்கள் கோவில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபட குவிந்து வருகின்றனர்.

    நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடக்கிறது. இதனால் தான் ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள கதை என்னவென்று பார்க்கலாம்?

    குருவிடம் ஜோதிடம் கற்ற சந்திரன்:

    ஜோதிட சாஸ்திரத்தின் குருவான பிரகஸ்பதியிடம் சந்திர பகவான் தெய்வீக தன்மைகள், சாஸ்திரங்கள் பற்றி கற்றுக்கொள்வதற்காக மாணவனாக சேர்ந்துள்ளார். குரு பகவானும் தனக்கு தெரிந்த அனைத்து ஜோதிட கலைகளையும் சந்திரனுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

    தனது குருவான குரு பகவானிடம் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்ட சந்திரனுக்கு தான் என்ற ஆணவம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. இதையறிந்த குரு பகவான் அவரது ஆவணத்தை அடக்க முடிவு செய்தார்.

    இதனால், பூமியில் புதியதாக பிறந்த குழந்தைக்கு ஜாதகம் ஒன்றை கணிக்கும்படி சந்திர பகவானுக்கு கூறியுள்ளார். சந்திர பகவானும் தான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துள்ளார். அதில், அந்த குழந்தை ஒரு வயது வரை மட்டுமே உயிருடன் இருக்கும் என்றும், ஒரு வயது பூர்த்தியடையும் போது பாம்பு கடித்து உயிரை விடும் என்றும் கணித்து எழுதியுள்ளார்.

    இதையடுத்து, சரியாக அந்த குழந்தையின் முதல் வயது பூர்த்தியடையும் போது என்ன நடக்கிறது? என்பதை பார்க்க குரு பகவானும், சந்திரனும் விண்ணுலகில் இருந்து பார்த்தனர். அப்போது, சந்திரன் கணித்தது போலவே அந்த குழந்தையின் ஒரு வயது பூர்த்தியடைய சில நிமிடங்களே இருந்த சூழலில், அந்த குழந்தை படுத்திருந்த தொட்டியின் மீது பாம்பு ஒன்று வந்தது.

    இதைக்கண்ட சந்திரனுக்கு தான் கணித்தது போலவே நடக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. குரு பகவானும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டிலில் இருந்த குழந்தை தன்னை நோக்கி வரும் பாம்பை ஒரு விளையாட்டு பொருளாக நினைத்து துள்ளிக்குதித்தது. இதனால், தொட்டில் ஆடியது.

    அப்போது பாம்பின் தலை தொட்டிலின் சங்கிலியில் சிக்கிக் கொண்டது. சங்கிலியில் சிக்கிக் கொண்ட பாம்பு அதில் இருந்து தப்பிக்க தனது உடலை முன்னும், பின்னும் அசைத்தது.

    இதைப்பார்த்த குழந்தை இன்னும் உற்சாகமாக தொட்டிலில் துள்ளிக்குதித்தது. இதனால், பாம்பின் வால் உள்பட பின்பகுதியும் தொட்டிலில் மறுமுனை சங்கிலியில் சிக்கிக்கொண்டது. குழந்தை துள்ளிக்குதிக்கவும், தொட்டில் சங்கிலி இறுகவும் பாம்பு உடல் நசுங்கி உயிரிழந்தது.

    இதைக்கண்ட சந்திரன் அதிர்ச்சியில் உறைந்தான். சந்திரனின் கணிப்புப்படி, பாம்பு கடித்து குழந்தையே உயிரிழக்க வேண்டும். ஆனால், சங்கிலியில் சிக்கி பாம்பு உயிரிழந்தது. இதனால், தன்னுடைய கணிப்பை சந்திரன் சரிபார்க்கத் தொடங்கினான். சந்திரனின் கணிப்பு மிகச்சரியாகவே இருந்தது.

    இதையடுத்து, குரு பகவானிடம் தனது கணிப்பில் எந்த தவறும் இல்லையே? பின் எப்படி குழந்தை உயிர் பிழைத்தது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த குரு பகவான் உனது கணிப்பில் தவறு இல்லை. ஆனால், குரு பகவானாகிய எனது பார்வை இருந்ததால் குழந்தை உயிர் பிழைத்தது என்று விளக்கம் அளித்தார்.

    மேலும், சந்திரனிடம் உனது ஜாதக கணிப்பு தவறு இல்லை என்றும், அதனால் உனக்கு வந்த ஆணவமே தவறு என்று கூறியுள்ளார்.

    தலைக்கணம் நீங்கிய சந்திரன், குரு பார்வையின் மகிமையையும் புரிந்து கொண்டார். இதன் காரணமாகவே குரு பார்க்க கோடி நன்மை என்று உண்டாகியதாக புராணங்கள் கூறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.
    • வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி புதன்கிழமை அன்று, மாலை 5.21 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குரு தன்னுடைய பார்வையால், 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார்.

    இந்த குருப்பெயர்ச்சிக்கு முன்னதாக, குரு சன்னிதியில் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த குருவானவர், தன்னுடைய பகை கிரகமான சுக்ர வீட்டிற்கு அல்லவா செல்கிறார். அதற்காக நாம் பயப்படவும் தேவை இல்லை. 'குரு பார்க்க கோடி நன்மை' என்றும், குரு சேர்ந்தால் கோடி தோஷம் நிவர்த்தி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

    எதிரியாக இருந்தாலும் எதிரில் வந்து குரு பார்த்தால், பகை உணர்வு மாறி பாச உணர்வு கூடும். எனவே இந்த குருப்பெயர்ச்சி எல்லோர் வாழ்விலும் எதிர் பாராத மாற்றங்களையும், ஏற்றங்களையும் வழங்கப்போகிறது. குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக, கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் குரு நேரடியாக பார்க்கிறார். எனவே அந்தராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    விரும்பியபடியே காரியம் நடைபெறும். வருமானம் உயரும். வாகன யோகம் வந்து சேரும். செல்வாக்கு மிக்கவர்களாக தேசத்தில் பவனி வரும் வாய்ப்பு உண்டு.

    இவை தவிர, ஜென்ம குருவாக ரிஷபத்திற்கும், அர்த்தாஷ்டம குருவாக கும்பத்திற்கும், அஷ்டமத்து குருவாக துலாத்திற்கும், விரய குருவாக மிதுனத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்களும், வளர்ச்சி பெற நினைப்பவர்களும் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் தசாபுத்தி பலம் பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டியது அவசியம்.

    அவ்வாறு செய்வதால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு, வீடு கட்டும் யோகம், வழக்கில் வெற்றி உத்தியோக உயர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை தக்கவிதத்தில் நடைபெறும்.

    ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இடையில் வக்ரம் பெறுகிறார். வக்ர காலத்தில் சிலருக்கு வளர்ச்சியும், சிலருக்கு தளர்ச்சியும் ஏற்படும். இதற்கிடையில் 26.4.2025 அன்று ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ்கிறது. இவற்றைப் பொறுத்தும், சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும் குருப்பெயர்ச்சி பலன்கள் இப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    ரிஷப குருவின் சஞ்சாரம்

    1.5.2024 முதல் 11.6.2024 வரை கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் (சூரியன் சாரம்)

    12.6.2024 முதல் 18.8.2024 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்)

    19.8.2024 5 7.12.2024 நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

    8.12.2024 முதல் 10.2.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ரம்

    11.2.2025 முதல் 4.4.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ர நிவர்த்தி

    5.4.2025 முதல் 11.5.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

    ×