search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujrat Polls"

    • குஜராத்தில் 2-ம் கட்டமாக நாளை மறுநாள் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
    • வரும் 8-ம் தேதி இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இதற்கிடையே, இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்தி நகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள 93 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

    தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    குஜராத்தைப் பொறுத்தவரை இதுவரை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மட்டும்தான் போட்டி நிலவி வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.

    வரும் 8-ம் தேதி ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரியவரும்.

    • குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.
    • குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்து விட்டது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    மாநகராட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ. தேர்தலாக இருந்தாலும் சரி, எம்.பி. தேர்தலாக இருந்தாலும் சரி. அனைத்து இடங்களிலும் மோடியின் முகம்தான் உள்ளது.

    உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது? உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன? ராவணனுக்கு 10 தலை இருந்தது போல் மோடிக்கு 100 தலையா இருக்கு? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமதித்து விட்டது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    • குஜராத் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
    • குஜராத் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என பிரதமர் மோடி பேசினார்.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ம் தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    குஜராத் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்கவைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற போராடுகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் புதிதாக போட்டியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத்தின் மெஹ்சானா நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் கூட்டத்தினரிடையே பேசியதாவது:

    மெஹ்சானாவில் மக்களின் அன்பு நிறைந்த வரவேற்பை பார்த்து செயலற்று போயுள்ளேன். குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற தயாராகி வருகிறது.

    கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் பெருமளவு மாறியுள்ளது. குஜராத் மாநிலம் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனை அவர்கள் பார்த்தது இல்லை. அவர்களின் முந்தின தலைமுறை இன்று காணப்படும் குஜராத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிட்டது. காங்கிரசானது, குடும்ப அரசியல், சாதிய அடிப்படையிலான, மதவெறி சார்ந்த மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியல் நடத்தும் மாதிரியை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    ×