search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Globalization"

    • ஒரே கட்சி ஆட்சி முறை காரணமாக எதிர்ப்புகளின்றி திட்டங்கள் நிறைவேறி வந்தன
    • செப்டம்பர மாதம் வரை சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

    சீனா, 1998 வரை கம்யூனிஸ சித்தாந்தத்தை கடைபிடித்து வந்ததால், உள்நாட்டு வர்த்தகத்திலேயே கவனம் செலுத்தி, உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்து கொள்ளாமல் இருந்தது.

    அதற்கு பிறகு மெல்ல மாற தொடங்கிய சீனாவின் பொருளாதார சித்தாந்தங்களின் காரணமாக, அந்நாடு தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியது. ஒரே கட்சி ஆட்சி முறை உள்ள நாடு என்பதால், சீனா, தன் நாட்டை முன்னேற்றும் திட்டங்களை உடனுக்குடன் எந்த எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தி, அதி வேகமாக தனது உற்பத்தி திறனை பெருக்கி கொண்டது.

    இதன் காரணமாக சீன பொருட்களே உலக சந்தைகள் முழுவதும் குவிய தொடங்கின. இதனால், சீனாவில் பல உலக நாடுகள் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தன.

    சமீப சில மாதங்களாக சீன பொருளாதாரம் இறங்குமுகமாக உள்ளது. சீனாவின் உள்நாட்டு வர்த்தகம் முன்பு இருந்ததை விட பல மடங்கு சரிவடைந்துள்ளது.

    அங்கு தொடர்ந்து குறைந்து வரும் வட்டி விகிதத்தாலும், அமெரிக்காவுடன் (முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியிலிருந்த காலத்தில் இருந்தே) தொடங்கிய புவிசார் அரசியல் சர்ச்சைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளின் காரணமாகவும், வரும் காலங்களில் மேலும் பொருளாதாரம் மந்தமாக கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையே முக்கியமான சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில் இரு நாட்டு நல்லுறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, சமீப காலங்களாக சீனாவில் முதலீடு செய்து வந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக அங்கிருந்து தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்து செல்கின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை குறைவதால், சீனாவிற்கு மாற்றாக பிற நாடுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

    கடந்த செப்டம்பர் வரையிலான 3 மாதங்களுக்கு அயல்நாட்டு முதலீடுகளில், சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    சீன பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உலக நாடுகளுடன் இணைந்திருப்பதால், அதன் சரிவு உலகளாவிய அளவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் உலகமயமாக்கல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
    • 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''உலகமயமாக்கும் போக்கு'' என்ற தலைப்பில் சிறப்புரை நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி அறிமுக உரையாற்றினார்.

    சிவகாசி சிறப்பு விருந்தினராக எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி வணிகவியல் உதவிப் பேராசிரியர் சவுந்திரபிரியா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகமயமாக்கல் என்பதன் பொருள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், உலகமயமாக்கும் யுக்திகள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் நிறை-குறைகள், இதனால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சந்தையிடுதலில் ஏற்பட்டுள்ள புதிய யக்திகள் பற்றி எடுத்துரைத்தார்.

    அனைத்து மாணவர்க ளையும் சுயதொழில் தொடங்க ஊக்கம் அளித்ததுடன் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். சங்கீதப் பிரியா, ஸ்ரீமலர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    சூரியபிரகாஷ் வரவேற்றார். மகாராஜா நன்றிய கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார். இந்த சிறப்புரையில் 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ×