search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக பொருளாதாரம்"

    • நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம்.
    • அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    மகராஜ்கஞ்ச்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டார். இதில் 40,011 பேருக்கு ரூ.1,143 கோடி கடன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

    நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம். அதன் மூலம் ஒவ்வொருவரும் பலனடைவார்கள்.

    அந்தவகையில் உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையின் கீழ் 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இது அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • ஜப்பானிய மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது
    • ஜப்பானில் அனைத்து துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது

    கிழக்கு ஆசியாவில் வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, ஜப்பான்.

    உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு 3-ஆம் இடத்தில் இருந்து வந்தது.

    ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

    தற்போது, ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து நகர்ந்து, 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஜெர்மனி, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

    அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டாலர் மதிப்பில் 2023க்கான ஜப்பானிய ஜிடிபி, $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ஒரு தசாப்தத்திற்கு முன் 2-வது இடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய "யென்" (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

    ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.


    மேலும், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

    "சூரியன் முதலில் உதிக்கும் பூமி" (Land of Rising Sun) என அழைக்கப்படும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள் தொகை எண்ணிக்கை குறைவதாலும், வயதானவர்கள் அதிகரிப்பதாலும், தம்பதியர் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பாததாலும், அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3-ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • ரெப்போ வட்டி தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும். எந்த மாற்றமும் இல்லை.

    இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    உலகக் பொருளாதாரம் தொடர்ந்து உடையக் கூடியதாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது.

    உள்நாட்டு உற்பத்தி முந்தைய 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கி- கார்பரேட் ஆகியவற்றின் ஆரோக்கியமான இரட்டை சமநிலைக்கு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

    உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன.

    முக்கிய பணவீக்கத்தில் பரந்த அடிப்படையிலான தளர்வு உணவு பணவீக்கத்திற்கு ஆபத்தானது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • ஒரே கட்சி ஆட்சி முறை காரணமாக எதிர்ப்புகளின்றி திட்டங்கள் நிறைவேறி வந்தன
    • செப்டம்பர மாதம் வரை சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

    சீனா, 1998 வரை கம்யூனிஸ சித்தாந்தத்தை கடைபிடித்து வந்ததால், உள்நாட்டு வர்த்தகத்திலேயே கவனம் செலுத்தி, உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்து கொள்ளாமல் இருந்தது.

    அதற்கு பிறகு மெல்ல மாற தொடங்கிய சீனாவின் பொருளாதார சித்தாந்தங்களின் காரணமாக, அந்நாடு தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியது. ஒரே கட்சி ஆட்சி முறை உள்ள நாடு என்பதால், சீனா, தன் நாட்டை முன்னேற்றும் திட்டங்களை உடனுக்குடன் எந்த எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தி, அதி வேகமாக தனது உற்பத்தி திறனை பெருக்கி கொண்டது.

    இதன் காரணமாக சீன பொருட்களே உலக சந்தைகள் முழுவதும் குவிய தொடங்கின. இதனால், சீனாவில் பல உலக நாடுகள் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தன.

    சமீப சில மாதங்களாக சீன பொருளாதாரம் இறங்குமுகமாக உள்ளது. சீனாவின் உள்நாட்டு வர்த்தகம் முன்பு இருந்ததை விட பல மடங்கு சரிவடைந்துள்ளது.

    அங்கு தொடர்ந்து குறைந்து வரும் வட்டி விகிதத்தாலும், அமெரிக்காவுடன் (முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியிலிருந்த காலத்தில் இருந்தே) தொடங்கிய புவிசார் அரசியல் சர்ச்சைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளின் காரணமாகவும், வரும் காலங்களில் மேலும் பொருளாதாரம் மந்தமாக கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையே முக்கியமான சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில் இரு நாட்டு நல்லுறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, சமீப காலங்களாக சீனாவில் முதலீடு செய்து வந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக அங்கிருந்து தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்து செல்கின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை குறைவதால், சீனாவிற்கு மாற்றாக பிற நாடுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

    கடந்த செப்டம்பர் வரையிலான 3 மாதங்களுக்கு அயல்நாட்டு முதலீடுகளில், சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    சீன பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உலக நாடுகளுடன் இணைந்திருப்பதால், அதன் சரிவு உலகளாவிய அளவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது.
    • 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும் என சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில், வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியா, தற்போதைய ஆண்டிலும் நிலையான, வலுவான வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இந்தியாவில், அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. நடுத்தர வகுப்பினர் செலவழிப்பது அதிகரித்து வருகிறது.

    நுகர்வோர் சந்தை விரிவடைவதால், பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு அதிகரிக்கும்.

    இந்தக் காரணங்களால் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் டாலராக (ரூ.600 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இதன்மூலம் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை முறியடித்து உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும்.

    ஆசிய அளவில் 2-வது இடத்தைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

    ×