search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
    X

    பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

    • நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம்.
    • அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    மகராஜ்கஞ்ச்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டார். இதில் 40,011 பேருக்கு ரூ.1,143 கோடி கடன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

    நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம். அதன் மூலம் ஒவ்வொருவரும் பலனடைவார்கள்.

    அந்தவகையில் உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையின் கீழ் 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இது அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    Next Story
    ×