search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "furious sea"

    • கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் கடலில் ராட்சத அலைகள் எழும்பியது.
    • கடல் நீர் வீடுகளுக்குள் செல்லாமல் இருக்கும் வகையில் மணல் மூடைகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.

    அப்போது ஏற்படும் ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்து வருவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் அழிக்கால் கடற்கரை கிராமங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் கடலில் ராட்சத அலைகள் எழும்பியது. நேற்று மாலையில் வழக்கத்தை விட அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது.

    இதனால் அழிக்கால் கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது. கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். ஒரு சில வீடுகளுக்குள் மணல் குவியல்களாக காட்சி அளித்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.

    ஒரு சில வீடுகள் முன்பு கடல் நீர் வீடுகளுக்குள் செல்லாமல் இருக்கும் வகையில் மணல் மூடைகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. கடல் நீர் புகுந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். 50 பெண்களும், 15 ஆண்களும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடல் சீற்றம் பற்றி தகவல் அறிந்ததும் விஜய்வசந்த் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பாய் மற்றும் தலையணைகளை வழங்க ஏற்பாடு செய்தார்.

    நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் அதிகாரிகளும் கடல் நீர் புகுந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். நேற்று இரவு அலையின் வேகம் குறைய தொடங்கியதையடுத்து வீடுகளை சூழ்ந்து இருந்த வெள்ளம் வடியத் தொடங்கியது.

    இன்று காலையில் மீண்டும் ராட்சத அலைகள் எழும்பியது. அலைகள் கடற்கரையொட்டி உள்ள வீடுகள் வரை வேகமாக வந்து மோதி சென்றன. பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்திலேயே உள்ளனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடல் சீற்றமாகவே காணப்பட்டது. எனவே கடற்கரையையொட்டி உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு கடலோர காவல் படை போலீசாரும், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கஜா புயல் இன்றிரவு புதுவை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் புதுவைக்கு வர வேண்டிய பெங்களூரு, ஐதராபாத் விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. #plane #gaja #CycloneGaja

    புதுச்சேரி:

    கஜா புயல் இன்றிரவு புதுவை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலை எதிர்கொள்ள கடந்த 5 நாட்களாக புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் ஆயத்த பணிகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துள்ளது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரை திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அனைத்து மீனவர்களும் கரைக்கு திரும்பியுள்ளனர்.

    மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடம், அரசு பள்ளி ஆகியவை திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

    கஜா புயலையொட்டி 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு புதுவை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவைக்கு வந்தனர். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு குழு காரைக்காலுக்கு சென்றுள்ளது. மற்றொரு குழுவினர் புதுவை மீட்பு பணிகளில் ஈடு பட தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு உடனடியாக நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் தனித் தனியே ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.

    அரசின் பொதுப்பணித் துறை, மின்துறை, உள்ளாட் சித் துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புயல் தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் அவசர கால செயல் மையமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதி பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்களும் துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை புதுவையில் புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்று வீச தொடங்கியது. இன்று அதிகாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் புதுவையே இருண்டது. காலை 10 மணிக்கு மேல் இடியுடன் லேசான மழையும் பெய்ய தொடங்கியது.

    புயல் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    புயல் காரணமாக புதுவை சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் ஆகியவற்றில் படகு சேவை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் புதுவைக்கு வர வேண்டிய பெங்களூரு, ஐதராபாத் விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது.

    கஜா புயல் இன்று இரவு 11 மணியளவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உணவு, குடிநீர், தேவையான மருந்து பொருட்களை இருப்பு வைத்து கொள்ளும்படியும் வருவாய்த்துறை அறிவுறுத்தி உள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கவும் மின்துறை திட்டமிட்டுள்ளது. #plane #gaja #CycloneGaja 

    நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

    டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. 1-ந் தேதி முதல் 4-ந் தேதி முதல் மழை பெய்தது.

    நேற்று ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்தது. நாகை. வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

    இதற்கிடையே நாளை (6-ந் தேதி) முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மேலும் கரையோரங்களில் தங்களது விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதேபோல் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று 5 -வது நாளாக கடலுக்கு செல்ல வில்லை.

    குமரியில் இன்று கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் வங்க கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் ஆகிய முக்கடல் சந்திக்கும் திரிவேணி சங்கம பகுதி உள்ளது. அந்த பகுதியில் இன்று கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் முன்பு காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.வழக்கமாக 7.45 மணிக்கு பூம்புகார் படகு போக்குவரத்தில் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும். 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும்.

    இன்று கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு போக்குவரத்து நுழைவு வாயில் தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    கடலில் 10 முதல் 15 அடி வரை அலைகள் எழுந்தது. பாறையில் பயங்கர சத்தத்துடன் அலைகள் மோதின. இதனால் சுற்றுலா பயணிகளை கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் சுற்றுலா போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கடல் பகுதியில் நிற்கும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து கரையோர பகுதிக்கு அனுப்பி வைத்தனர். 
    கடல் சீற்றமாக கோவளம், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் குறைந்த அளவு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 

    இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு கடல் சீற்றம் சற்று குறைந்தது. இதையடுத்து 1 1/2 மணி நேரம் தாமதமாக பூம்புகார் படகு போக்குவரத்து துறையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு படகுகள் செல்ல தொடங்கியது. திருவள்ளுவர் சிலைக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.
    குளச்சல் கடலில் காணப்பட்ட கடல் சீற்றம் காரணமாக அதிகாலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
    குளச்சல்:

    குமரி மேற்கு மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளன.

    படகுகள் கடலுக்கு செல்லாவிட்டாலும் இங்கிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்கள், கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

    கட்டுமரங்களில் செல்லும் மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு செல்வார்கள். ஆனால் இன்று காலையில் குளச்சல் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் காணப்பட்டது. கொட்டில் பாடு, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது.

    கடல் சீற்றம் காரணமாக அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. மேலும் அலை தடுப்பு சுவரையும் தாண்டி அலைகள் வீசியது.

    இது போல குளச்சல் பகுதியில் கடலுக்குள் உள்ள பாலத்தின் மேற்புற சுவரையும் தாண்டி அலைகள் ஆக்ரோ‌ஷமாக எழுந்தது. அதோடு கடல் அரிப்பும் காணப்பட்டது.

    இதன் காரணமாக கடற்கரையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட மணல் மேடுகள் அலையால் இழுத்து செல்லப்பட்டு மாயமானது. மேலும் கடல் அலைகளால் தூண்டில் வளைவுகளும் சேதமானது.

    குளச்சல் கடலில் காணப்பட்ட கடல் சீற்றம் காரணமாக அதிகாலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். மேலும் அவர்கள் தங்களின் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    அதிகாலையில் சென்றவர்களை தவிர மற்ற மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்தது.

    குளச்சல் மீன் மார்க்கெட்டிற்கு அதிகாலையிலேயே உள்ளூர் வியாபாரிகள் பலரும் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் பிடித்து வரும் மீன்களை வாங்க வருவார்கள். இன்று கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு பெரும்பாலான மீனவர்கள் செல்லாததால் மார்க்கெட்டில் போதுமான மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.

    இதனால் மீன் மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு நெத்திலி மீன்கள் அதிகமாக பிடித்து வரப்பட்டது. ஆனால் இன்று மீன்கள் இன்றி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
    மரக்காணத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை இதனால் கடற்கரை பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.

    மரக்காணம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15- ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனபெருக்க காலமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை தவிர்த்தனர். மாறாக சிறிய படகுகளை கொண்டு கரையோர பகுதிகளில் மட்டும் மீன்பிடித்து வந்தனர்.

    இதை போல் மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் மீன்பிடி தடை காலத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை .

    அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி படகுகளை சீரமைத்து, வர்ணம் தீட்டுதல், மீன்பிடி வலைகளை சரி செய்தல், புதிய வலைகளை பின்னுதல் போன்ற பணிகளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் அரசு அறிவித்த மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்தனர் .

    ஆனால் இன்று மரக்காணம் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது . சுமார் 7 அடி உயர அளவில் அலைகள் எழுந்தன.

    இதனால் மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அனுமந்தை, கூனிமேடு குப்பம், சின்ன முதலியார் சாவடி, எக்கியார் குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க வில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மரக்காணம் கடற்கரை பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

    ×