என் மலர்

    நீங்கள் தேடியது "fire accident"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனியார் விடுதியின் மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ அறை முழுவதும் பரவியது.
    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

    சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதானல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தனியார் விடுதியின் மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ அறை முழுவதும் பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர், பெரும் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் மட்டும் மழை பெய்த நிலையில் இடி, மின்னல் அதிகமாக இருந்தது. மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் அனுப்பங்குளம் பகுதியில் இடி, மின்னல் அடித்தப்படி இருந்தது. அப்போது சேவுகனின் பட்டாசு ஆலையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்னல் தாக்கி தீ பிடித்தது.

    இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    மேலும் பட்டாசு ஆலையின் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. பட்டாசு ஆலை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் மின்னல் தாக்கி தீ பிடித்ததால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சபாளையம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(வயது 42). இவர் அந்தப் பகுதியில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ குடிசை வீடு என்பதால் மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், கட்டில் போன்றவை எரிந்து சாம்பலாகின. இதற்குள் அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு அங்கு ஓலை கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த ஓலை கொட்டகையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குடிசை முழுவதும் பற்றி எரிந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட போது கொட்டகையில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த தீ அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோனுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் சாய்ந்து கீழே தெருவில் சிதறியது.
    • 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடிவருகின்றனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் சாய்ந்து கீழே தெருவில் சிதறியது. தரையில் நின்றிருந்த ஒரு வாகனம் தீயில் கருகியது.

    பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடிவருகின்றனர்.

    தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது.
    • உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் அடுத்த நார்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது85). இவரது மனைவி ராஜம்மாள் (80). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென மின் கசிவால் குடிசை வீட்டில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பற்றி எரிந்தது.

    இதில் சிக்கிய மூதாட்டி ராஜம்மாவால் வெளியே வர முடியவில்லை. அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கோவிந்தராஜ் லேசான காயங்களுடன் உயிர்தப்பி வெளியே வந்தார்.

    மேலும் குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி, மனைவி கற்பகம், அவர்களது 2 பெண் குழந்தைகள் ஆகியோர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் கோவிந்தராஜ், உமாபதி ஆகியோரின் வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஆரம்பாக்கம் போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
    • கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர்.

    அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.

    கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

    உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீ மளமளவென மில்லில் இருந்த தேங்காய் பருப்பு மற்றும் எந்திரங்கள் போன்றவற்றில் பரவி எரிய தொடங்கியுள்ளது.
    • தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேலான எந்திரங்கள் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து நாசமாகின.

    திருப்பூர்:

    காங்கேயம் அருகே தம்மரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆயில் மில்லில் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென மில்லில் இருந்த தேங்காய் பருப்பு மற்றும் எந்திரங்கள் போன்றவற்றில் பரவி எரிய தொடங்கியுள்ளது. இது குறித்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ராஜு தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீயை அணைக்க முடியவில்லை. இதன் பின்னர் ஊத்துக்குளியில் இருந்து மேலும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேலான எந்திரங்கள் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணம் என தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சொந்தமாக பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த பிரிண்டிங் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன.

    நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்திலிருந்து புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சி.என்.சி. மெஷின், அதிநவீன பிரின்டிங் மிஷின், ஏ.சி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. நல்ல வாய்ப்பாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா என தெரிய வில்லை. இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம்.
    • 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், கொத்தகனாம்பட்லா கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வீடுகள், கொட்டகைகள், வைக்கோல் போர் உள்ளிட்டவை திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் ஆந்திரா தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தில் சிலர் ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் அமானுஷ்ய வழிபாடுகள் செய்தனர். அந்த கிராமத்தை துரதிஷ்டம் பிடித்துள்ளதாகவும், கெங்கையம்மன் திருவிழா நடைபெறாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் வதந்திகள் பரவியது. இதனால் கிராம மக்கள் நடுங்கினர். சிலர் ஊரை விட்டு தற்காலிகமாக வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, கலெக்டர் வெங்கடரமண ரெட்டி, அதிகாரிகள், எஸ்.வி.பல்கலைக்கழக வேதியியல், இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கிராமத்திற்கு வந்தனர். பயப்பட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உண்மையான காரணத்தை கண்டறியும் வகையில், கிராமங்களில் உள்ள 18 இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீசார் இறுதியாக கண்டுபிடித்தனர். அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஒரு மாதமாக 8 வீடுகள் மற்றும் 3 கொட்டகை, வைக்கோல் போர்களுக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    தாயின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பழிவாங்கும் எண்ணத்தில் கொட்டகைகள் வைக்கோல் போர், போன்றவற்றுக்கு தீ வைத்துள்ளார். தற்போது இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.32,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து சந்திரகிரி இன்ஸ்பெக்டர் ஓபுலேசு ஆகியோர் கூறியதாவது:-

    முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம். பின்னர் ஜாலியாக சுற்றித்திரிபவர்களை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை பிடித்து தங்களது பாணியில் விசாரணை செய்தோம். பின்னர் அவர்களை அனுப்பி வைத்து, அவர்களின் நடத்தையை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இருப்பினும், 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர். ஒரு பெண் போலீஸ்காரர் இளம்பெண் வீட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து வந்தார். தீ விபத்து நடந்த நான்கைந்து இடங்களில் ஒரே மாதிரியான தீப்பெட்டிகள் இருந்தன.

    இளம்பெண்ணின் வீட்டில் உள்ள தீப்பெட்டியுடன் பொருந்தியதால் இளம்பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் தனது தாயின் நடத்தை சரியில்லாததால் அவரை மாற்றவே கிராமத்தில் தீ வைத்ததாக இளம்பெண் ஒப்புக்கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print