search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fierce competition"

    • வயநாடு தொகுதி முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா என்ற கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், கேரள மாநில மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய இரு கூட்டணிகளின் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் களம் கண்டனர்.

    அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் இரு கூட்டணி கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்ட னர்.

    அதிலும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகள் கட்சியினருக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

    ஏனென்றால் அந்த தொகுதியில தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் கண்டனர். தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்து தேர்தலில் களம் கண்டது அந்த கட்சிக்காரர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    மேலும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பிற கட்சியினரின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி தவைர்கள், தங்களின் பிரசாரத்தில் அந்த பிரச்சினையை பற்றி பேசினார்கள். இது இந்தியா கூட்டணிகளுக்கிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தலும் கேரளாவில் நடந்து முடிந்துவிட்டது. தற்போது அனைவரும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். அதிலும் வயநாடு தொகுதி முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சூழலில் தான் ராகுல்காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியிலும் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.

    வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என்றதும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இந்த தேர்தலிலும் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கருதியதே அதற்கு காரணமாகும்.

    அந்த உற்சாகத்தில் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் மட்டுமுன்றி ஐக்கிய ஜன நாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் உற்சாகமாக தேர்தல் பணி யாற்றினார்கள்.

    ஆனால் தற்போது ரேபரேலி தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டியிடுவதால் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றி ருக்கும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரேபரேலி காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதியாகும்.

    சோனியா காந்தி கடந்த 5 முறை நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி. அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதன் மூலம், அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

    ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றால் அவர் எந்த தொகுதியில் பணி யாற்றுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் இருந்து வெளியேறுவாரா? என்ற கேள்வி வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்காக ஓட்டு கேட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

    அப்படி அவர் வெளியேறி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் தங்களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா? என்ற அச்சமும் அவர்களுக்குள் உருவாகி உள்ளது.

    • புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது.
    • ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி–விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் காந்தி, அண்ணாதுரை மற்றும் அம்பேத்கர் சிலைகள் இருந்தது. விழுப்புரம்–-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடந்தது.புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை அங்கு திரண்ட பா.ஜ.க. வினர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்–க்கு சிலை அமைக்க இடம் பிடித்து தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். அதேபோல் பா.ம.க. வினர் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவிற்கு சிலை வைக்க வேண்டும் என தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். இந்த நிலையில் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., வினர் அங்கு வந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ் வாசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டி.எ்ன்.ஏ., தமி்ன் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.

    அப்போது தி.மு.க., மற்றும் பா.ஜ.க, பா.ம.க. வினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பின ரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பா விதம் ஏற்படாமல் தடுக்க டி.எஸ்.பி. மித்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினசபாபதி, செல்வராஜி ஆகியோர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், ஆர்.ஐ., சாந்தி, மாயாவதி ஆகியோர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக தலை வர்கள் சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்கலாம். அனுமதி கிடைத்தால் மட்டுமே சிலை வைக்க இயலும் என தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் தலைவர்கள் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் அங்கு பேசி முடிவு மேற்கொள்ள லாம் என தெரிவித்தனர். தலைவர்கள் சிலை வைக்க இடம் பிடிப்பதில், கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×