search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electoral Officer"

    • பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.
    • வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கையில் பணம் கொண்டு செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். வழக்கும் தொடரப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களுடன் ரூ.1 லட்சம் வரை வைத்து கொள்ளலாம். ஆனால் அவருடன் இருக்கும் வேட்பாளர் ரூ.50 ஆயிரம்தான் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகளையும் நிர்ணயித்துள்ளனர். சிறிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் வரை செலவு செய்யலாம். பெரிய மாநிலங்களில் ரூ.95 லட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம்.

    சட்டசபை தேர்தல் என்றால் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம். கூட்டங்கள், பேரணிகள், விளம்பரங்கள், வாகன செலவுகள் அனைத்தும் இந்த வரம்பிற்குள் அடங்க வேண்டும்.

    வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். செலவு கணக்குகளை தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

    வேட்பாளர்கள் தினசரி செலவினங்களுக்காக தனி பதிவேட்டை பராமரிப்பதுடன், ஒவ்வொரு நாளும் தேர்தல் அதிகாரிக்கு விரிவான அறிக்கைகளை வழங்க வேண்டும். அந்த பதிவேட்டில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பிற பிரசார நடவடிக்கைகளுக்கான செலவுகள், வீடியோ பதிவுகள் ஆகியவை ஆதாரமாக இருக்க வேண்டும்.

    நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்கும் பிரசார நிகழ்வுகளின் போது ஏற்படும் செலவுகள் வேட்பாளர் மற்றும் பிரசாரகர் இடையே பிரிக்கப்படலாம். எடுத்துக் காட்டாக, ஒரு வேட்பாளர் நட்சத்திர பிரசாரம் செய்பவருடன் பயணம் செய்தால் அல்லது அவரது பெயரையும் படத்தையும் கேமராவில் வைத்திருந்தால் செலவுகள் பிரிக்கப்படும்.

    1951-52-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில், வேட்பாளர்களின் செலவு அதிக பட்சமாக ரூ.25 ஆயிரம். வட கிழக்கு மாநிலங்களில் ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவிட அனுமதிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டில், பெரும்பாலான மாநிலங்களுக்கான செலவுத் தொகை ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டது. 1980-ல் ஒரு வேட்பாளருக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உயர்த்தப்பட்டது.

    • 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.
    • கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருணா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தற்போது தலா 9 பறக்கும் படை குழுக்கள், தலா 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுரைகளின் படி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கூடுதலாக தலா 3 பறக்கும் படை குழு க்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய வை அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் தற்போது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுஉள்ளது. இக்குழுக்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று நடந்தது. #Allpartymeeting #Electionofficer

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க 9 கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

    ஆனால் 6 கட்சி பிரதிநிதிகளே பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகரும் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், வக்கீல் மனோஜ் பாண்டியன் ஆகியோரும், தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இரா. கிரிராஜன், நீலகண்டன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், தனிகாசலம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆறுமுகநயினார், ராஜசேகரன், தே.மு.தி.க. மதிவாணன், பாலசுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி பாரதிதாசன், கே.எஸ். மோகன், தேசியவாத காங்கிரஸ் சாரதி மற்றும் அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (1-ந்தேதி) வெளியிடப்படுவதால், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம் இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்குதல் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தேர்தல் ஆணையர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும், சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்தும், ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    போலி வாக்காளர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குகள் இருப்பதை கண்டு பிடித்து அதனை ஊழியர்கள் முற்றிலும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். #Allpartymeeting #Electionofficer

    வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்காக நாளை (சனிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள் சரிதானா? என்பதையெல்லாம் சரிபார்த்து திருத்திக்கொள்ள இது வாய்ப்பாக அமைகிறது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதோடு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதற்கும் இந்த காலகட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் ஜனவரி 1-ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடக்கும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இந்த முகாம் கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூட்டியுள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த கருத்துக்களை கட்சி பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.
    ×