search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Compensation Amount"

    • விபத்தில் கால்களை இழந்த பெண் ஒருவருக்கு ரூ.48 லட்சத்திற்கான இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டது.
    • மக்கள் நீதிமன்றம் நிகழ்வானது திருப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழு அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக மக்கள் நீதிமன்றம்( லோக் அதாலத் )நிகழ்வானது திருப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கி கடன், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்கு , சிவில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் விபத்தில் கால்களை இழந்த பெண் ஒருவருக்கு ரூ.48 லட்சத்திற்கான இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டது.

    • இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.
    • ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம் எனும் மக்கள் நீதிமன்றம் மாதம் தோறும் முதல் வாரத்தில் நடைபெறும் அதன் அடிப்படையில் இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.

    நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டது.

    அதன் அடிப்படையில் விபத்து வழக்கு குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.அதன் அடிப்படையில் கடந்த 2022 -ம்ஆண்டு மணிராஜன் என்பவர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கு ம்போது 2 சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயல் இழந்தன இந்த விபத்து குறித்த வழக்கு சமரசத் தேர்வு முறையில் தீர்வு காணப்பட்டு பாதிக்கபட்ட நபருக்கு 8 லட்சம் இழப்பீடு காசோலை யை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    இதேபோல கடந்த 2021 குரு என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் - ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த ஆட்டோ மோதிய விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது இந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டு குருவுக்கு ரூ.23 லட்சகான காசோலை வழங்கினார்.இதேபோல் செல்வம் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு லாரியை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குச் சென்றபோது பாம்பு கடித்தது. இந்த வழக்கில் சமரசத் தீர்வு காணப்பட்டு ரூ.10 லட்சம் காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.

    மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    அப்போது நீதிபதி சரண்யா மற்றும் மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செயலாளர் தங்கராஜ் வழக்கறிஞர்கள் ரகுபதி மற்றும் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதியில் புறவழிச்சாலை அமைக்க கமுதி வருவாய் கிராமத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலம் வழங்கியவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து இழப்பீட்டுத் தொகை பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜானகி தலைமை யில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 12 பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். 12 பேருக்கும் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், தலைமை நில அளவையர் நாகவள்ளி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை மற்றும் ரூ.60 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்ரமணியன் 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரிய பெண்மணியை அடுத்த கொலப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், விவசாயி. இவர் துங்கபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மும்பையை சேர்ந்த யுனிவர்சல் ஷாம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 2021-22-ம் நிதி ஆண்டில் சுரக்சா காப்பீடு பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி உள்ளூரில் நடந்த ஒரு துக்க காரியத்திற்காக சுப்ரமணியன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு தனது உறவினர்களுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மாடு குறுக்கே வந்ததால், சுப்ரமணியன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின்பு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்ரமணியன் 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து சுப்ரமணியத்தின் மகன் வீரமணி காப்பீடு தொகையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காப்பீடு செய்து இருந்த நிறுவனம் மற்றும் துங்கபுரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர் ஆகிய இருவர் மீதும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வக்கீல் விஜயன் மூலம் வீரமணி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்காகவும் வீரமணியின் மனஉளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள முதல் எதிர்மனுதாரர் நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வீரமணிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் காப்பீட்டு தொகையான ரூ.10 லட்சத்தை 45 நாட்களுக்குள் வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பயிர் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 முதல், சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2016-17-ம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் காலத்தே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை விரைந்து கணிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.4.2017 அன்று தொடங்கி வைத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    2016-17ம் ஆண்டில் மத்திய அரசால் சம்பா நெற்பயிரை பதிவு செய்வதற்கு நீட்டிக்கப்பட்ட காலத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும், காரீப் 2016 மற்றும் ரபி 2016-17-ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்தும்படி பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்.


    அதைத் தொடர்ந்து இந்திய வேளாண் காப்பீட்டுக்கழகம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ரூ.103.15 கோடி வழங்கியுள்ளது. மேலும், நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கும்படி மத்திய அரசின் அறிவுரைக்கிணங்க மற்ற காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு பொதுக் காப்பீட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தற்போது இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில், 2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிக்கப்பட்டு 10 லட்சத்து 62 ஆயிரத்து 495 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட இதர தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் மிக அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

    முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, காப்பீட்டு நிறுவனங்களால் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவேண்டிய ரூ.453 கோடி இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குவதற்கு காப்பீட்டு நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தும், விவசாயிகளின் அரணாக இந்த அரசு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×